Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஐஸ்வர்யா ராய்க்காக கேன்ஸில் மீண்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு!
கேன்ஸ்: விமான தாமதம் காரணமாக கேன்ஸ் திரைப்பட விழாவின் புகழ்பெற்ற சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சியைத் தவறவிட்டார் ஐஸ்வர்யா ராய்.
இதனால் அவருக்காகவே மீண்டும் அந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்துள்ளது சர்வதேச திரைப்பட விழாக் குழு.
பிரான்ஸ் நாட்டின் பாரிஸிலிருந்து வெளிவரும் லோரியல் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத் தூதுவராக இருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
கடந்த 13 வருடங்களாக அவர் கேன்ஸ் நகரத்தில் நடைபெறும் திரைப்பட விருது விழாவில் பங்கேற்று வருகிறார்.
சிவப்புக் கம்பள வரவேற்பு
இந்த விழாவில் உலகின் பல்வேறு பகுதியிலிருந்து வரும் பிரபல நடிகைகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுவது வழக்கம்.
சிவப்பு கம்பளத்தில் அவர்கள் அழகாக நடந்து வருவதைக் காண ஏராளமான ரசிகர்களும் புகைப்படக்காரர்களும் காத்திருப்பார்கள்.
விமான தாமதம்
இந்த ஆண்டு கேன்ஸ் விழாவுக்கான சிவப்புக் கம்பள வரவேற்பு நேற்று நடந்தது. ஆனால் இதில் ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை.
லண்டனிலிருந்து நைஸ் நகரத்திற்கு செல்லும் இணைப்பு விமானத்தில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் அவரால் குறிப்பிட்டபடி கேன்ஸ் வந்துசேர முடியவில்லை.
அறிக்கை
இது குறித்து சர்வதேச திரைப்பட நிர்வாக மேலாளர் மனஷி குஹா வெளியிட்டு உள்ள அறிக்கையில், "நேற்று நடந்த நிகழ்ச்சியில் துரதிருஷ்டவசமாக ஐஸ்வர்யா ராயால் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே, அவருக்காக இந்நிகழ்ச்சியை வேறொரு நாளில் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
21-ம் தேதி
அதன்படி வரும் 21-ம் தேதி மீண்டும் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. அதில் ஐஸ்வர்யா ராய் கவர்ச்சி உடையில் ஒய்யாரமாக நடந்து வருகிறார்.