வேணும்னே எரியும் நெருப்பில் பக்கெட் பக்கெட்டா எண்ணெய் ஊற்றிய ஐஸ்வர்யா ராய்?
மும்பை: ஏற்கனவே தனது மருமகள் ஐஸ்வர்யா ராய் மீது கோபத்தில் இருந்த அமிதாப் பச்சன் அவர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து பிலிம்பேர் பத்திரிகைக்கு கொடுத்துள்ள போஸ்களால் கடும் கோபத்தில் உள்ளாராம்.
கரண் ஜோஹாரின் இயக்கத்தில் ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளார். இந்த நெருக்கமான காட்சிகளால் ஐஸ்வர்யா மீது அவரது கணவர் அபிஷேக், மாமனார் அமிதாப், மாமியார் ஜெயா பச்சன் ஆகியோர் கோபத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நெருக்கமான காட்சிகளில் ஐஸ்வர்யாவே விரும்பிக் கேட்டு நடித்தது தெரிந்து மேலும் கோபத்தில் உள்ளனர்.

போட்டோஷூட்
ஏற்கனவே வீட்டில் பத்தி எரியும்போது ஐஸ்வர்யா ராய் ரன்பிர் கபூருடன் சேர்ந்து பிலிம்பேர் பத்திரிகைக்கு போஸ் கொடுத்துள்ளார். அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக போஸ் கொடுத்துள்ளது தான் பிரச்சனை.

அமிதாப் பச்சன்
படத்தில் நடித்ததற்கே கோபத்தில் இருந்த பச்சன்கள் பிலிம்பேர் புகைப்படங்களை பார்த்து காதில் புகை வரும் அளவுக்கு ஐஸ்வர்யா ராய் மீது கடும் கோபத்தில் உள்ளார்களாம்.

முஷ்கில்
மருமகளை ஆதரிக்கும் மாமனாரான அமிதாப் ஏ தில் ஹை முஷ்கில் படத்தின் ட்ரெய்லரை கூட இன்னும் பார்க்கவில்லை. ட்ரெய்லரை பார்த்தவர்களும் ஐஸ்வர்யா, ரன்பிர் நெருக்கம் பற்றி தான் பேசினார்கள்.

ஐஸ்வர்யா ராய்
ஒரு பெண் குழந்தைக்கு தாயான ஐஸ்வர்யா ராய் திடீர் என விரும்பிக் கேட்டு இப்படி ரன்பிருடன் நெருக்கம் காட்டி நடிப்பது போஸ் கொடுப்பது பாலிவுட்டில் பல வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











