நாமலாம் காசு கொடுத்து முடி வெட்டுறோம், ஆனா ஐஸு மட்டும் கோடிக்கணக்கில் வாங்கிட்டு வெட்டிருக்காங்க!
மும்பை: புதிய விளம்பரம் ஒன்றில் பாப் ஹேர் ஸ்டைலில் கலக்கலாக வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.
அபிஷேக் பச்சனை மணந்த பிறகு எந்திரன் உள்பட சில படங்களில் நடித்தார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். ஆனால், கடந்த 2011ம் ஆண்டு ஆராத்யா என்ற பெண் குழந்தை பிறந்த பிறகு படங்களில் நடிப்பதை தவிர்த்தார்.
தற்போது ஆராத்யாவிற்கு மூன்று வயதாகி விட்ட நிலையில் மீண்டும் சினிமாவிம் மறுபிரவேசம் செய்துள்ளார்.

விளம்பரங்களில் மட்டும்...
சினிமாவில் நடிப்பதைத் தவிர்த்த போதும், விளம்பரங்களில் மட்டும் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரிசனம் தந்து வந்தார் ஐஸ்வர்யா ராய்.

கூந்தல் பராமரிப்பு...
இந்நிலையில், ஐஸ்வர்யாராய் சமீபத்தில் கூந்தல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். ஏற்கனவே, இதே நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்திருந்தாலும், தற்போது இந்த புதிய விளம்பரத்துக்காக ஐஸ் தனது கூந்தலை தியாகம் செய்திருக்கிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம்...
நீண்டு வளர்ந்த கூந்தலை கட் செய்து பாப் ஹேர்ஸ்டைலுடன் இதில் தோன்றுகிறார் ஐஸ். இந்த ஹேர்ஸ்டைலுக்காக ஐஸுக்கு பல கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாம்.

மாமியார் அட்வைஸ்...
இதையடுத்து தனது கணவர் மற்றும் மாமியாரின் ஆலோசனையைக் கேட்ட பின்னர் இந்த புதிய ஹேர்ஸ்டைலுக்கு மாறியுள்ளாராம் ஐஸ்.
நாமலாம் காசு கொடுத்து முடி வெட்டுறோம், ஆனா ஐஸு மட்டும் காசு வாங்கிட்டு முடி வெட்டி இருக்காங்க....


Click it and Unblock the Notifications











