twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சும்மா உல்லூலாயிக்கு சொன்னேன்”.. விஜய் ரசிகர்களுக்கு பயந்து ஜகா வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

    கனா வெற்றி விழாவில் பேசியது குறித்து டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    |

    Recommended Video

    ஐஸ்வர்யா ராஜேஷை மேடையில் இருந்து இறங்க சொன்ன சிவகார்த்திகேயன்- வீடியோ

    சென்னை: கனா வெற்றி விழாவில் தான் பேசியதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என டிவிட்டர் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

    அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வெளியான படம் கனா. சிவகார்த்திக்கேயனின் முதல் தயாரிப்பாக வெளிவந்த இப்படம் தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.

    நேற்று முன்தினம் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், "பலர் வெற்றி பெறாத படங்களுக்குக்கூட வெற்றி விழா நடத்துகின்றனர். இது தான் உண்மையான வெற்றி விழா" எனப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

    2018ம் ஆண்டை நகை நகைக்க வைத்த பெஸ்ட் காமெடியன்

    அடங்கமறு தான்:

    அடங்கமறு தான்:

    கனா படத்துடன் மாரி 2, அடங்கமறு உள்பட நாலைந்து படங்கள் வெளியாகின. இதில் அடங்கமறு படக்குழு சமீபத்தில் தான் வெற்றி விழா கொண்டாடியது. எனவே, அதனைத்தான் ஐஸ்வர்யா ராஜேஷ் மறைமுகமாகத் தாக்கி பேசுகிறார் என்ற பேச்சு சமூகவலைதளங்களில் எழுந்தது.

    சர்கார்:

    சர்கார்:

    ஆனால், ஐஸ்வர்யா சர்கார் படத்தைப் பற்றி தான் அப்படி சொன்னார் என சிலர் சமூகவலைதளங்களில் கொளுத்திப் போட்டனர். இப்படிக் கூறுபவர்கள் நிச்சயம் அஜித் ரசிகர்களாகத் தான் இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் கோபமடைந்தனர். இதனால், அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் இடையே சமூகவலைதளங்களில் வார்த்தை சண்டை நடந்து வருகிறது.

    விளக்கம்:

    விளக்கம்:

    இதைப் பார்த்து பயந்து போன ஐஸ்வர்யா ராஜேஷ், தனது பேச்சு குறித்து டிவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர், "கனா வெற்றிவிழாவில் நான் சும்மா விளையாட்டுக்காகத் தான் அப்டி பேசினேன். எந்தப் படத்தையும் குறிப்பிட்டுச் சொல்லலை.

    மன்னிப்பு:

    மன்னிப்பு:

    நான் யாரையும் மனதார துன்புறுத்த மாட்டேன். எல்லாப் படமும் ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகனும்னு தான் நான் வேண்டிப்பேன். ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்குத் தெரியும். அதை பெரிய வெற்றிப்படமாக மாற்றுவது அதைவிட எவ்வளவு கஷ்டமானது என்பதும் எனக்குத் தெரியும். என் பேச்சு யாருடைய மனதையாவது துன்புறுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

    தொடரும் மோதல்:

    தொடரும் மோதல்:

    ஆனாலும், இந்தப் பிரச்சினையை விஜய்- அஜித் ரசிகர்கள் விடுவதாக இல்லை. தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் பதிவிற்கும் அவர்கள் பதில் அளித்து சண்டையிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    "My speech is just a fun", says kanaa actress Aishwarya Rajesh.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X