Don't Miss!
- News லோக்சபா 2ம் கட்ட தேர்தல்: 13 மாநிலம் 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு.. முக்கிய வேட்பாளர்கள் லிஸ்ட்
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே இந்த ஆசை இருந்தது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Recommended Video
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து தயாரித்த 'காக்கா முட்டை' படத்தின் மூலம் தமிழில் பேசப்படும் நடிகையானார்.
இந்நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
'காக்கா முட்டை' படத்தில் நடிக்கும்போதே தனுஷுடன் இணைந்து நடிக்கவேண்டும் என விரும்பியதாகவும், அது கொஞ்சம் லேட்டாக நிறைவேறியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஐஸ்வர்யா ராஜேஷ்
மணிகண்டன் இயக்கிய 'காக்கா முட்டை' படத்தில் நடித்து பாராட்டு பெற்றவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தப் படத்தை தனுஷ், வெற்றிமாறன் இணைந்து தயாரித்தனர். தற்போது தனுஷ் - வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
தனுஷுடன் நடிப்பது
இதுகுறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், " 'காக்கா முட்டை' படத்தில் தனுஷின் தயாரிப்பில் நடித்தபோது, எதிர்காலத்தில் எப்படியாவது அவருடன் இணைந்து நடிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் நினைத்த மாதிரி அது உடனே நடக்கவில்லை. தனுசஷுடன் நடிக்க வேண்டும் என்பது கனவாகவே இருந்து வந்தது.
பல நடிகைகள் மாறி
இப்போது 'வடசென்னை' படத்தின் மூலம் அது நனவாகியிருக்கிறது. நான் நடித்துவரும் குப்பத்துப் பெண் வேடத்தில் முதலில் அமலாபால் நடிப்பதாக இருந்தார். அதன்பிறகு சமந்தா நடிக்கவிருந்தார். இப்போது நான் நடித்துக் கொண்டிருக்கிறேன்.
மகிழ்ச்சி
தனுஷுடன் நடிக்க வேண்டுமென்று நான் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருந்ததால் தானோ என்னவோ அந்த வாய்ப்பு வேறு யாருக்கும் செல்லாமல் என்னைத்தேடி வந்துவிட்டது. தனுஷ், வெற்றிமாறன் ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் படங்களில் நடிப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது" எனக் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
துருவ நட்சத்திரம்
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்', மணிரத்னம் இயக்கத்தில் 'செக்கச் சிவந்த வானம்' உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் சில நாட்கள் நடிக்க கஷ்டமாக இருந்தது. பிறகு இயக்குனர் பாணிக்கு நான் என்னை மாற்றிக்கொண்டேன்" எனத் தெரிவித்துள்ளார்.