Don't Miss!
- News ஒரு ஓட்டுக்காக போராடிய "சர்க்கார்" விஜய் நிலையா இது.. கட்சி தலைவரான முதல் தேர்தலிலேயே ஏமாற்றம்
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அஜீத்தை நேரில் பார்க்க ஆசைப்படும் நஸ்ரியா
அஜீத் என்னுடைய மனதிற்கு பிடித்த ஹீரோ என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். அவருடன் நடிக்க முடியாவிட்டாலும் ஒருமுறையாவது நேரில் பார்த்து பேச ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் விஜய் விருது விழா சென்னையில் நடைபெற்றது. அதில் சிறந்த அறிமுக நடிகை விருது பெற்றார் நஸ்ரியா. அவரிடம் பிடித்த ஹீரோ யார் என்று கேட்டதற்கு, அஜீத் என்று கூறினார்.
ஜோடி சேர ஆசை
நஸ்ரியாவுக்கு, அஜீத்துடன் ஒரு படத்திலாவது டூயட் பாட வேண்டும் என்ற கனவு உள்ளதாம். அதற்காக, அவர் தீவிரமாக முயற்சித்து வந்துள்ளார்.
திருமணம் நிச்சயம்
மலையாள நடிகர் பஹத் பாசிலுடன் நஸ்ரியா காதலில் விழுந்ததை அடுத்து, அவர்களின் திருமணமும் முடிவாகி விட்டது. இதனால், நஸ்ரியாவின் அஜீத்துடன் நடிக்கும் கனவு, நனவாகவில்லை.
நேரில் பார்க்க ஆசை
ஆனாலும், அஜீத்தை, ஒருமுறையாவது நேரில் சந்தித்து பேச வேண்டும் என, ஆசைப்படுகிறார், நஸ்ரியா. இதனை விருது விழா மேடையிலும் தெரிவித்துள்ளார் நஸ்ரியா.
ரசிகையாக காத்திருக்கிறேன்
ஒரு ரசிகையாக, அஜீத்துடன் மனம் விட்டு பேசும் நேரத்துக்காக காத்திருக்கிறார். இந்த ரசிகையின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜீத்.