Don't Miss!
- News உங்கள் தொகுதி வேட்பாளர்களின் சொத்துக்கள், கடன்கள், குற்ற வழக்குகளை பற்றி முழுமையாக எப்படி அறிவது?
- Sports "3 வருடத்தில் ஐபிஎல் தொடரே இருக்காது".. ஆனால் நடந்தது இதுதான்.. அஸ்வின் அதிரடி
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Finance கௌதம் அதானி கையில் பணம் விளையாடுது.. ரூ.6,661 கோடி புதிய முதலீடு..!!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சகலகலா வள்ளி ஆல்ரவுண்டர் அழகி யாரு ? நம்ம ப்ரியா ஆனந்த்து !!!
Recommended Video
சென்னை : நடிகை ப்ரியா ஆனந்த் தமிழில் ஜெய்யுடன் வாமனன் படத்தில் அறிமுகமானவர் . அதற்கு பிறகு தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என தென்னிந்திய சினிமாவை ஒரு சுற்று சுற்றி வந்தார் ப்ரியா ஆனந்த். மேலும் ப்ரியா ஆனந்த் ஹிந்தியில் இங்கிலீஸ் விங்கலீஸ் , ரங்கரீஸ், ஃவுக்ரே,ஃவுக்ரே ரிட்டன்ஸ் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். மற்ற மொழிகளை விட தமிழில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் ப்ரியா ஆனந்த் .
ப்ரியா ஆனந்த 2011 'சேவ் தி சில்ரன்' எனும் அமைப்பின் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியின் தூதராக இணைந்து தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவினார் . 'சேவ் தி சில்ரன்' அமைப்பு கடந்த 100வருடங்களுக்கு மேல் குழந்தை தொழிலாளர்கள் அடிமைகளாக சிக்கி தவிக்கும் குழந்தைகள் என பல குழந்தைகளை மீட்டு வருகிறது. ப்ரியா ஆனந்த அந்த குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது எனக்கான கடமை என்று கூறியிருந்தார் .
ப்ரியா ஆனந்தின் அப்பா தெலுங்கு பேசுபவர். அம்மா மராட்டி பேசுபவர். சிறு வயதில் இருந்தே பல மொழிகளை கற்று சென்னையில் வளரந்தவர் ப்ரியா .இவருக்கு சரளமாக தமிழ், தெலுங்கு ,ஹிந்தி ,மராட்டி,பெங்காளி மற்றும் ஸ்பேனிஷ் வரை தெரியும் . இந்த காலகட்டத்தில் பல மொழிகளில் பேசும் நடிகையை காண்பது மிகவும் சிரமமான விஷயம் .
சிறுவயதில் இருந்தே ப்ரியா ஆனந்த் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதையே கணவாய் கொண்டு வாழ்ந்து வந்தார் .அமேரிக்காவின் சன்னி அல்பனி பல்கலைக்கழகத்தில் பட்டம் முடித்து இந்தியா திரும்பிய ப்ரியா தனது கனவுப்படி சினிமாவில் நுழைய மாடலிங் , விளம்பரங்களில் நடிப்பது என தனது வேலைகளை செய்யும் போது தான் அவருக்கு வாமனன் படம் மூலம் அறிமுகமானார்.
ப்ரியா ஆனந்த தற்போது துரூவ் விக்ரம் அறிமுகமாகும் ஆதித்யா வர்மா படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகி பனித்தா சந்துவுடன் நட்பாகி உள்ள ப்ரியா அவருடன் தான் பட புரோமஷன்களில் கலந்து கொள்கிறார் . அவருக்கு இந்த படம் நிச்சயம் பாராட்டுகளை அள்ளித்தரும்.
இப்படி சரியான இடைவெளி விட்டு நடித்தாலும் ப்ரியா ஆனந்த் தனக்கு பொருத்தமான கதாபாத்திரங்களாகவே தேர்ந்தேடுக்கிறார். ஆல் தி பெஸ்ட் ப்ரியா !!!