Don't Miss!
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- Sports எவ்வளவு ரன் அடித்தால் என்ன.. எனக்கு அதுதான் முக்கியம்.. சத்தமில்லாமல் கவனம் ஈர்த்த சந்தீப் வாரியர்!
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Lifestyle உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கைது இல்லை - ஜாமீன் மனுவை வாபஸ் வாங்கினார் அல்போன்சா!
நடிகை அல்போன்சாவுடன் வசித்து வந்த அவரது காதலர் வினோத்குமார் சமீபத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அல்போன்சா தரப்பில் கூறி வந்தனர். ஆனால் வினோத்குமார் குடும்பத்தினர் இதை திட்டமிட்ட கொலை என்றனர்.
வினோத்குமாரை அல்போன்சாவும், அவரது தம்பி ராபர்ட்டும் அடித்து கொலை செய்து பிணத்தை தூக்கில் தொங்க விட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அல்போன்சா மனு தாக்கல் செய்தார். நீதிபதி எம்.எஸ்.சுந்தரேஸ்முன்னிலையில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் வாதாடும்போது வினோத்குமார் மரணத்தை சந்தேக மரணமாக போலீசார் பதிவு செய்துள்ளனர்.
குற்றப் பத்திரிகையில் அல்போன்சா, ராபர்ட் பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்றார். உடனே நீதிபதி அப்படியென்றால் முன்ஜாமீன் அவசியம் இல்லை என்று கூறினார்.
இதையடுத்து கைது நடவடிக்கை இருக்காது என கருதி முன்ஜாமீன் மனுவை அல்போன்சா வாபஸ் பெற்றார்.