ரோமில் புத்தாண்டைக் கொண்டாடும் அமலா பால்!
நடிகை அமலா பால் இந்தப் புத்தாண்டை இத்தாலியின் ரோம் நகரில் கொண்டாடுகிறார்.
தமிழ் மற்றும் மலையாளத்தில் படு பிசியாக இருக்கிறார் அமலா பால். இரு மொழிகளிலுமே அவரது பெரிய படங்கள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன.
மலையாளத்தில் அவர் நடித்த ஒரு இந்தியன் ப்ரயாணகதாவை சமீபத்தில் சென்னையிலுள்ள தன் நண்பர்கள், இயக்குநர்களுக்கு போட்டுக் காட்டினார் அமலா பல்.
படத்தில் அவர் நடிப்பை பெரிதாக பாராட்டினார்களாம் அத்தனை பேரும். இன்னொரு பக்கம் தமிழில் ஜெயம் ரவியோடு அவர் நடித்துள்ள நிமிர்ந்து நில் படமும் சிறப்பாக வந்துள்ளதாம்.

இந்த சந்தோஷத்தோடு புத்தாண்டை இத்தாலி தலைநகர் ரோமில் கொண்டாட குடும்பத்துடன் பறக்கவிருக்கிறார் அமலா.
புத்தாண்டு அன்று வாடிகனில் நடக்கும் போப்பாண்டவர் பிரார்த்தனையிலும் கலந்து கொள்கிறாராம்.
Comments


Click it and Unblock the Notifications
