Don't Miss!
- News அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியிலிருந்து நீக்க கோரிய வழக்கு! மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஆடை படம் ரிலீஸாக சத்தமே இல்லாமல் அமலா பால் செய்த அந்த ஒரு காரியம் தெரியுமா? கிரேட்!
Recommended Video
சென்னை: ஆடை படம் ரிலீஸாக நடிகை அமலா பால் சத்தமே இல்லாமல் செய்த காரியம் ஒன்று தற்போது தெரியவந்துள்ளது.
நடிகை அமலா பால் நடிப்பில் இயக்குநர் ரத்னகுமார் இயக்கத்தில் உருவான படம் ஆடை. இந்த படத்தில் நடிகை அமலா பால் நிர்வாண கோலத்தில் நடித்ததால் பெரும் விமர்சனத்துக்கு ஆளானார்.
பலரும் நிர்வாணமாக நடித்த அமலா பாலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேநேரம் அமலா பாலின் தைரியத்தையும் துணிச்சலையும் சிலர் பாராட்டினர்.
19ஆம் தேதி வெளியாகும்
எதையும் கண்டுகொள்ளாத அமலா பால், படத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்று கூறி சாதித்த நம்பிக்கையில் இருந்தார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
லேபுக்கு வந்த அமலா
ஆனால் அறிவித்த தேதியில் படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையறிந்த அமலாபால் வடபழனியில் உள்ள லேப்புக்கு வந்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருடன் பிரச்சனை குறித்து கேட்டறிந்தார்.
ரூ.25 லட்சம் கொடுத்த அமலா பால்
பெரும் எதிர்ப்புக்குப் பின் நடித்த படம் வெளியாகாததை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார் அமலா பால். பின்னர் படத்தை வெளியிட தனது சொந்தப் பணத்தில் இருந்து 25 லட்சம் ரூபாய் பணத்தை தயாரிப்பாளருக்கு வழங்கி படம் ரிலீஸாக உதவி செய்துள்ளார் அமலா பால்.
நெகிழ்ந்து போன தயாரிப்பாளர்
படம் வெளியான பிறகுதான் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார் அமலா பால். தமிழ் திரையுலக வரலாற்றில் எந்த நடிகையும் இப்படி தயாரிப்பாளருக்கு உதவி செய்தது இல்லையாம்.
சம்பளமும் வாங்கவில்லை
அமலா பால் செய்த உதவியால் நெகிழ்ந்து போயுள்ளார் தயாரிப்பாளர் கே.ராஜன். ஏற்கனவே படத்தில் நடித்தற்கு நடிகை அமலா பால் முழு சம்பளமும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.