Don't Miss!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Education தமிழக வேளாண் துறையில் காத்திருக்கும் வேலை...!
- News ஜெகத்ரட்சகன் சொத்து மதிப்பு எவ்வளவு ? கடன் மட்டும் ரூ.649 கோடி.. சொந்தமாக ஒரு கார் கூட இல்லை
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
“கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு இன்பம் கொடுப்பான்”.. நிஜத்தில் செய்து காட்டிய அமலாபால்!
அமலாபால் கையில் கட்டுடன் கேரள மக்களுக்கு உதவி செய்யும் போட்டோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
திருவனந்தபுரம்: படப்பிடிப்பில் காயமடைந்த அமலாபால், கையில் கட்டுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
சமீபகாலமாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க நடிகைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், 'அதோ அந்த பறவை போல' என்னும் நாயகியை மையப்படுத்திய படத்தில் அமலா பால் நடித்து வருகிறார்.
ஆக்சன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சண்டைக் காட்சி ஒன்றில் நடித்த போது, வலது கையில் காயமடைந்தார் அமலாபால். தசை நார்களில் காயம் ஏற்பட்டதால் அவர் கொச்சியில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
இந்நிலையில், தனது வலியைப் பொருட்படுத்தாமல் கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருள்களை கடைக்குச் சென்று வாங்கும் நிவாரணப் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
வெள்ளத்தில் தவிக்கும் கேரள மக்களுக்கு சினிமா பிரபலங்கள் பலர் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்தவகையில், தனக்கு உடல்நிலை சரியில்லாதபோதும் களத்தில் இறங்கி மக்களுக்குத் தேவையானவற்றை வழங்கி வருகிறார் அமலா பால் என அவரை சமூகவலைதளப் பக்கங்களில் நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
சங்கமம் படப் பாடலில் ஒரு வரி வரும், 'கலைஞன் தன் கண்ணீரை மூடிக் கொண்டு மக்களுக்கு இன்பம் கொடுப்பான்’ என. நிஜத்தில் இந்த வரிகளை சத்தமில்லாமல் செய்து காட்டியுள்ளார் நடிகை அமலாபால்.
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
என்னைவிட நல்லா நடிப்பியா?.. 5 விரலும் பதியுறமாதிரி அறைந்த தம்பி ராமைய்யா.. கும்கி சுப்பையா பகீர்!