திரும்பவும் பீச் புகைப்படங்கள் வெளியிட்ட அமலாபால்.. ஆனா, எப்டி சமாளிச்சிருக்கார் பாருங்க!
அமலாபால் கடற்கரையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை அமலாபால் கடற்கரையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விவாகரத்திற்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடித்து வரும் அமலாபால், அடிக்கடி பயணங்கள் செய்வதையும் வாடிக்கையாக வைத்திருக்கிறார். அவ்வாறு செல்லும் இடங்களில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்களையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
சமயங்களில் அவை அளவுக்கதிகமான கவர்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

புதிய புகைப்படங்கள்:
இந்நிலையில், சமீபத்தில் கடற்கரையில் தான் எடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் அமலாபால். வழக்கம் போல் அதிலும் உள்ளாடை தெரியும்படி படுகவர்ச்சியாகத் தான் உடையணிந்துள்ளார் அவர்.
கடல்கன்னியாக அமலாபால்:
ஆனால், அது சர்ச்சை ஆகாதவண்ணம், தனது ஒவ்வொரு புகைப்படத்திலும் சில எக்ஸ்ட்ரா வேலைகள் செய்திருக்கிறார். அதாவது ஒரு புகைப்படத்தில் கடல்கன்னி போல் தனக்கு வால் வரைந்திருக்கிறார். மற்றொரு புகைப்படத்தில் இறக்கைகள் வரைந்திருக்கிறார்.
தன்னம்பிக்கை வார்த்தைகள்:
கூடவே தன்னம்பிக்கை தரும் வாசகங்களையும் அவற்றுடன் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதனால், அமலாபாலின் கவர்ச்சியான உடையை ரசிகர்கள் கண்டுகொள்ளவில்லை. அதற்கு மாறாக அமலாபால் மிகவும் அழகாக இருப்பதாகவும், அவரது வார்த்தைகள் அர்த்தமுள்ளவைகளாக இருப்பதாகவும் பாராட்டி வருகின்றனர்.
அறிவுரை:
குறிப்பாக இந்தப் புகைப்படத்தில் அவர், "தீராத பிரச்சினைகள் துரத்தும் போது உங்களை நீங்களே இப்படிக் கேட்டுக் கொள்ளுங்கள். நான் மூன்று வயதாக இருந்தபோது எப்படி இருந்தேன்?" எனப் பதிவிட்டுள்ளார் அமலாபால்.


Click it and Unblock the Notifications











