முதலில் தண்ணி, இப்போ தம், அடுத்து...: அமலா பாலை விளாசும் நெட்டிசன்கள்
Recommended Video

சென்னை: நடிகை அமலா பால் புகைப்பிடிப்பது போன்று புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சர்ச்சைகளின் செல்லப் பிள்ளையாகி வருகிறார் அமலா பால். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்டியை மடித்துக் கட்டி கையில் மது பாட்டிலுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இந்நிலையில் தற்போது மேலும் ஒரு சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அமலா பால்
அமலா பால் தான் தம்மடிக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, நான் புகைப்பிடிப்பதை ஊக்குவிக்கவில்லை. ஒரு ஹாலிவுட் ரசிகையின் கனவு நிறைவேறியுள்ளது. அனைத்து ஸ்டார்களுக்கும் புகைப்பிடிக்கும் புகைப்படம் இருக்கும், இது என்னுடையது என்று தெரிவித்துள்ளார்.

தேவையா?
பட போஸ்டரில் யாராவது தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்திருப்பதை பார்த்தாலே எதிர்ப்பு கிளம்பும். இந்நிலையில் தானாக வந்து சிக்கிய அமலா பாலை சும்மாவிடுவார்களா என்ன?. ஏற்கனவே சமூக வலைதளங்களில் அவரை விளாசத் துவங்கிவிட்டனர். விளம்பரம் தேட அமலா பால் இப்படி எல்லாம் செய்வதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

விளம்பரம்
முன்னதாக அமலா பால் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் மது, புகை என்று சர்ச்சைக்குரிய விஷயங்களை கையில் எடுத்துள்ளார். எல்லாம் பப்ளிசிட்டி படுத்தும் பாடு. அடுத்து என்ன செய்யப் போகிறாரோ என்று தெரியவில்லை என்கிறார்கள் நெட்டிசன்கள்.

புகைப்படங்கள்
அமலா பால் அவரின் படங்களை விட சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் புகைப்படங்களுக்காக தான் அதிகம் பேசப்படுகிறார். இதை உணர்ந்து தான் சர்ச்சையை கிளப்பும் வகையில் புகைப்படங்களை வெளியிடுகிறார் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











