Don't Miss!
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- News வெயிலில் சுருண்டு விழுந்து துடித்த மாற்றுத்திறனாளி.. உதவாமல் சென்ற மக்கள்! ஓடிப்போய் மீட்ட காவலர்
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மாங்காய்க்கு முத்தம்.. பூனையுடன் கொஞ்சல்.. லாக் டவுன் நேரத்தை இவருடன் தான் செலவிடுகிறார் அமலா பால்!
கேரளா: லாக் டவுன் நேரத்தில் கேரளாவில் பெய்த முதல் மழையை நடிகை அமலா பால் ரசித்து மகிழும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video
சிந்து சமவெளி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அமலா பால், தெய்வத் திருமகள் படத்தின் ஷூட்டிங்கின் போது, இயக்குநர் விஜய்யுடன் மலர்ந்த காதலால் அவரை திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.
அப்போ முட்டை தோசை.. இப்போ டல்கோனா காஃபி.. கிச்சன் கில்லாடி ஆகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!
அம்மாவுடன்
அமலா பாலுக்கும் பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங்குக்கும் இரண்டாவது திருமணம் நடைபெற்றதாகவும், திருமண புகைப்படங்களுடன் செய்திகள் வெளியாகி வைரலாகின. ஆனால், அது குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் நடிகை அமலா பால் வெளியிடவில்லை. இந்த லாக் டவுன் நேரத்திலும் தனது அம்மாவுடன் கேரளாவில் தான் வசித்து வருகிறார்.
View this post on InstagramA post shared by Amala Paul ✨ (@amalapaul) on
மாங்காய்க்கு முத்தம்
ஊரடங்கு உத்தரவு காரணமாக ஷூட்டிங் ஏதுமின்றி வீட்டில் தனது அம்மாவுடன் நேரத்தை கழித்து வரும் நடிகை அமலா பால், தனது தோட்டத்தில் உள்ள மாங்காய் மரத்தில் புதிதாக காய்த்துள்ள மாங்காய்களை கண்டு அதற்கு முத்தம் கொடுக்கும் வீடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் மழை
ஏப்ரல் மாத வெயிலுக்கு இடையே திடீரென பெய்த மழையை கண்டதும், இந்த லாக்டவுன் நேரத்தில் பெய்த முதல் மழையும் சிறப்பு வாய்ந்தது என்று பேசிய படியே தனது பூனையை கொஞ்சிய படியும், தனது தோட்டத்தில் காய்த்திருக்கும் மாங்காய்களுக்கு முத்தம் கொடுத்தும், மரத்தில் இருந்து விழும் மழைத் துளிகளை ரசிப்பதுமாக என்ஜாய் பண்ணுகிறார்.
கணவன் எங்கே
நடிகை அமலா பால், பாலிவுட் பாடகர் பவிந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி வைரலான நிலையில், அம்மாவுடன் தனியாக இருக்கும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், அமலா பால் உங்க ரெண்டாவது புருஷன் எங்கே என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
ஆபாசமாக
அமலா பால் தனது தோட்டத்தில் காய்த்த மாங்காய்க்கு முத்தம் கொடுப்பது போல எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 4 லட்சம் லைக்குகளை அள்ளியுள்ள அந்த வீடியோவில், சில நெட்டிசன்கள் மாங்காய்க்களையும், அமலா பாலின் மார்பகங்களையும் கம்பேர் செய்து ரொம்ப ஆபாசமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.