Actress Amala Paul: அமலா பால் சில மாதங்களாக பாண்டிச்சேரியில் வசிக்கிறாராம்!
சென்னை: நடிகை அமலா பால் கடந்த சில மாதங்களாகவே பாண்டிச்சேரியில் வசித்து வருகிறாராம். இதற்கு முன்னர் சில மாதங்கள் வரை டெல்லியில் வசித்து வந்ததாகவும் சொல்லி இருக்கார்.
சென்னையில் படப்பிடிப்பு, அல்லது வேறு எங்காவது படப்பிடிப்பு இருந்தால், மட்டும் அப்போதைக்கு அங்கு சென்று படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு, அடுத்த ஷெட்யூல் வரும் வரை இங்கு தங்கி இருப்பதை வழக்கமாக்கிக் கொண்டு உள்ளாராம்.
பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆஷ்ரம் பகுதியில் தான் வசித்து வருவதாக கூறுகிறார். எப்போதும் நாம் செய்யும் தொழில் பற்றிய சிந்தனையில் இருப்பதால்,இந்த இடம் மாற்றம் தேவைப்படுகிறது என்றும் சொல்கிறார்.

அமலா பால் முதல் படம்
அமலா பால் சிந்து சமவெளி என்கிற படத்தில்தான் நடித்தார். அது அடல்ட் படம். ஆனால், இதற்கு முன்பாக மைனா படம் வெளிவந்துவிட்டது. ஆனால் இது வெளிவந்த சில நாட்களிலேயே சிந்து சமவெளி படம் வெளிவந்துவிட்டதால் மைனாவின் இயக்குநர் பிரபு சாலமன் செம டென்ஷானாகிவிட்டாராம். மைனாவில் எப்படி குடிம்ப குத்துவிளக்கு மாதிரி காமிச்சு இருக்கேன்.நீ இப்படி ஒரு படத்தில் நடிச்சு, அந்த படத்தின் இமேஜையே கெடுத்துட்டியேன்னு போனில் சத்தம் போட்டாராம்.

எழுந்துள்ள பிரச்சனையும்
இப்போது இவர் ஒரு படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகி, இருந்தார்.அந்த படத்தில் விஜய் சேதுபதி இலங்கை தமிழராக நடிக்க உள்ளார்.அந்த படத்தில் அமலாவுக்கு எந்த விதத்துக்கு முக்கியமான கதாபாத்திரம் என்றும் தெரியவில்லை. ஆனால், இவருக்கு தெரியாமலே தயாரிப்பாளர் இவரை அந்த படத்தில் இருந்து தூக்கி விட்டதாகத் தகவல்.

பிரடியூசர்ஸ் ஃப்ரண்ட்லி நடிகை
தன்னை பிரடியூசர்ஸ் ஃப்ரண்ட்லி நடிகை என்று கூறிக்கொள்ளும் அமலா ,எத்தனையோ தயாரிப்பாளர்கள் தன்னை படத்தில் நஷ்டத்தை சந்திச்ச போது தான் அவர்களுக்கு தனது சம்பளத்தை கூட விட்டுக் கொடுத்ததாகவும், ஆனால், தன்னை ஒரு தயாரிப்பாளர் தன்னிடம் சொல்லாமலே அந்த படத்தை விட்டுத் தூக்கியது தனக்கு வருத்தம் அளிப்பதாகவும் கூறுகிறார்.

ஆடை படத்தின் போஸ்டர்கள்
ஆடைப் படத்தின் போஸ்டர்களை பார்த்த பின்னர்தான் தயாரிப்பாளர் அந்த படத்தில் இருந்து அமலா பாலை நடிக்க வைக்கக் கூடாது என்று அவரை படத்தில் இருந்து எடுத்ததாக திரைத் துறையில் பேச்சு அடிபடுகிறது. இதற்கு முன்னர் சில மாதங்கள் டெல்லியில் தங்கி இருந்தாராம் அமலா பால். இதற்கெல்லாம் காரணம் என்னவென்று பார்த்தால்,வேலை செய்யும் இடத்திலேயே தாம் இருந்ததால் மூளை எப்போதும் வேலை பற்றியும், நாளை என்ன ஷூட்டிங் என்பதை பற்றியுமே சிந்தித்து கொண்டு இருப்பதால், மனதில் அமைதி இல்லாமல் மூளை ரெஸ்ட்லெசாக இருப்பதாக உணர்வதால்தான் இந்த இடமாற்றமாம்.


Click it and Unblock the Notifications











