மறுபடியும் அமலா பாலுக்கு என்னாச்சு.. அந்த விரல் பத்தியெல்லாம்.. இப்படி ட்வீட் போட்டு இருக்காரே?
சென்னை: சுய அன்பு என்பது சிறந்த நடு விரல் போன்றது என நடிகை அமலா பால் ட்வீட் போட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
சரியான புரிதல் இல்லாத நிலையில், இயக்குநர் ஏ.எல். விஜய் மற்றும் அமலா பால் இடையே விவாகரத்து ஏற்பட்டது.
நடிகை அமலா பால், விஷ்ணு விஷால் மற்றும் தனுஷுடன் நெருங்கி பழகியதாக பல வதந்திகள் பரவின.

சர்ச்சை நாயகி
ஹீரோயின்கள் என்றாலே அவர்களை சுற்றி எப்போதுமே பல விதமான சர்ச்சைகள் சூழ்ந்து கொண்டு இருப்பது எந்த மாதிரியான டிசைனோ தெரியவில்லை. இந்த விஷயத்தில் நடிகை அமலா பால் அதிகமாகவே ஸ்கோர் செய்து வருகிறார். போல்டாக நடிப்பது மட்டுமின்றி போல்டாகவும் பேசுவதிலும் அமலா பால் தனி கெத்தை காட்டி வருகிறார்.

இரண்டாவது திருமணம்
நடிகை அமலா பாலுக்கும், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குக்கும் திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியான நிலையில், அமலா பால் தரப்பு அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பு நிச்சயம் விரைவில் அறிவிக்கப்படும் என அங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

விஷ்ணு விஷால் அட்வைஸ்
சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சோகமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, சுதந்திரத்தை பற்றி தத்துவமாக பொழிந்து இருந்தார் நடிகை அமலா பால். அவரது பதிவை பார்த்த நடிகர் விஷால், நீங்க ஒரு சிறந்த நடிகை, உங்க தொழில் தான் உங்களுக்கு சுதந்திரத்தை தரும் என அட்வைஸ் செய்திருந்தார்.

அந்த விரல்
இந்நிலையில் தற்போது தனது புதிய புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அமலா பால், சுய அன்பு என்பது நடு விரல் போன்றது என பதிவிட்டுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. அமலா பாலின் இந்த பதிவு சூப்பர் என்று அவரது ரசிகர்களும், ஏன் இப்படி கொச்சையாக பதிவிட ஆரம்பிச்சுட்டீங்க உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











