Don't Miss!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- News இப்படி நடக்கும்னு யாருமே எதிர்பார்க்கல.. நெல்லையில் "லம்ப்"பாக வாரி இறைத்த "தலை".. பலன் கிடைக்குமா?
- Automobiles பைக்க விட அதிக மைலேஜ் தரும் ஹூண்டாய் கார்.. பொய் சொல்லல.. ஸ்ட்ராங்கான ஆதாரத்தோடதான் சொல்றாங்க!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
வடசென்னைக்காக மீனவ பெண்ணாக மாறும் அமலாபால்
சென்னை: வடசென்னை படத்தில் மீனவப் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதால், மீனவப் பெண்களின் பேச்சு மொழியை அமலா பால் பேசி கற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் வடசென்னை. தனுஷ், சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துவரும் இப்படத்தை தனுஷ் மற்றும் லைக்கா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.
கதாநாயகியாக முன்பு ஒப்பந்தம் செய்யப்பட்ட சமந்தா விலகிவிட்டதால், அமலாபால் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வடசென்னை' 3 பாகங்களாக வரவிருக்கிறது. இதில் 3 பாகங்களிலும் நாயகி அமலா பால் கதாபாத்திரம் வருவது போன்று வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன்.
ஏ.எல்.விஜய் உடனான விவாகரத்துக்கு பிரச்சினைக்குப் பின்னர் சினிமாவில் முழுமூச்சாக கவனம் செலுத்தி வருகிறார் அமலாபால்.
வடசென்னையில் மீனவப் பெண் கதாபாத்திரம், 3 பாகங்களிலும் வரும் கதாபாத்திரம் என்பதால் மீனவப் பெண்களுடைய பேச்சு மொழியை கற்றுக் கொண்டு நடித்து வருகிறார் அமலாபால்.
இப்படத்துக்காக சென்னை மத்திய சிறைச்சாலையை அரங்கமாக அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். முதல் பாகத்துக்கான பெரும்பகுதி படப்பிடிப்பு இந்த அரங்கில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பாகம் அடுத்தாண்டு வெளியாக இருக்கிறது. இப்படத்தின் கதைக்களம் 40 ஆண்டுகளை உள்ளடக்கியது என்பதால் மொத்த படக்குழுவுமே கடுமையாக உழைத்து வருகிறார்கள்.