மீண்டும் வேலையை காட்டிய ஏமி: ஷங்கர் பாவம் சொல்லி சொல்லி ஓய்ந்துவிட்டார்
Recommended Video

சென்னை: ஏமி ஜாக்சன் வெளியிட்டுள்ள படுகவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் நவம்பர் மாதம் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. படம் வெளியாகும் வரை சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என்று ஷங்கர் ஏமியிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது.
ஏமியோ தொடர்ந்து படுகவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஏமி
ஏமி கோட், சூட் அணிந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த உடையில் என்ன பிரச்சனை என்று நினைக்கலாம். கோட் போட்ட அம்மணி சட்டை, உள்ளாடை போட மறந்துவிட்டார். அதனால் புகைப்படத்திற்கு ஃப்ரீயாக போஸ் கொடுத்துள்ளார்.

விளாசல்
ஏமியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிலர் புகைப்படம் சூப்பர் என்று ஜொள்ளும் விட்டுள்ளனர். சிலரோ என்னம்மா, இப்படி பண்றீங்களேம்மா என்று கேட்டுள்ளனர். உடை எதற்காக அணிகிறோம் என்று தெரிய வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

போதும்
ஏமியிடம் சொல்லி சொல்லி பார்த்து ஷங்கரும் ஓய்ந்து விட்டார். அவர் என்ன சொன்னாலும் கேட்கும் மனநிலையில் ஏமி இல்லை. தனக்கு பிடித்தபடி கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

கவர்ச்சி
நிறைய செருப்புகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் தான் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஏமி. அதிலும் அவர் போட வேண்டியதை போடாமல் தான் இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











