Don't Miss!
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மாஜி காதலரின் பெயரை கையில் இருந்து அழித்த ஏமி ஜாக்சன்
மும்பை: ஏமி ஜாக்சன் தனது கையில் பச்சை குத்தியிருந்த முன்னாள் காதலரின் பெயரை அழித்துவிட்டார்.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக நடித்துள்ள ஐ படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் ஏமி ஜாக்சன். சிம்பு, த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கில் ஏமி ஜாக்சன் நடித்திருந்தார். அப்போது அவருக்கும் சிம்பு கதாபாத்திரத்தில் நடித்த பிரதீக் பாபருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
சில காலம் அவர்கள் ஜோடி போட்டு பல இடங்களுக்கு சென்றனர். காதலில் விழுந்த ஏமி தனது கையில் மேரா பியார், மேரா பிரதீக் என்று பச்சைக் குத்திக் கொண்டார். இந்நிலையில் ஏமியும், பிரதீக்கும் பிரிந்துவிட்டனர்.
இருப்பினும் ஏமி கையில் பச்சை மட்டும் அப்படியே இருந்து வந்தது. இந்நிலையில் அவர் அந்த பச்சையை அழித்துவிட்டார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
என் கையில் இருந்த பச்சையை அழித்துவிட்டேன். இனி நான் பச்சையே குத்த மாட்டேன். அப்படியே பச்சை குத்துவது என்றாலும் பல முறை யோசிப்பேன் என்றார்.