Don't Miss!
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- News மக்களவை தேர்தலில் பாமகவுக்கு 10 தொகுதிகள்! ஒப்பந்தத்தில் ஒரு மெகா ட்விஸ்ட்டை பார்த்தீர்களா?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
படுக்கையில் கணவர் எப்படி?: பப்ளிக்கா சொன்ன நடிகை
மும்பை: படுக்கை அறையில் கணவர் எப்படி என்பது குறித்து நடிகை சோனம் கபூர் வெளிப்படையாக பேசியது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
பாலிவுட் நடிகை சோனம் கபூர் தனது காதலரான தொழில் அதிபர் ஆனந்த் அஹுஜாவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.
மனதில் பட்டதை பேசுவதற்கு பெயர் போன சோனம் தனது கணவர் பற்றி டிவி நிகழ்ச்சியில் கூறியதாவது,
காதல்
ஆனந்த் அவரின் நண்பருடன் என்னை கோர்த்துவிட முயற்சி செய்தார். ஆனால் அது நடக்காமல் அவரும், நானும் காதலில் விழுந்தோம். நாங்கள் பழகத் துவங்கி ஒன்றரை ஆண்டுகள் கழித்து ப்ரொபோஸ் பண்ண நினைத்தார். நாங்கள் நியூயார்க் நகருக்கு சென்றபோது ஒரு நாள் நான் மோசமான மூடில் இருந்தேன்.
ஆனந்த்
இன்று நாளே சரியில்லை என்று நான் புலம்பிக் கொண்டிருந்தேன். நியூயார்க்கில் ஒரு நல்லவர் கூட இல்லையே என்றேன். ஆனந்த் சைக்கிள் ஓட்ட நான் அவர் அருகில் நடந்து கொண்டிருந்தேன். அவர் திடீர் என்று சைக்கிளில் இருந்து இறங்கி என்னை திருமணம் செய்து கொள்ள சம்மதமா என்று என்னிடம் மண்டியிட்டு கேட்டார்.
முடிவு
ஆனந்துக்கு என்னை ரொம்ப பிடிக்கும். நாங்கள் இருவரும் லண்டன் தெருக்களில் பேசிக் கொண்டே நடந்து சென்றபோது இவர் தான் என் கணவர் என்று எனக்கு அப்போதே தோன்றிவிட்டது. திருமணம் செய்து கொண்டதால் நான் படங்களில் நடிக்கக் கூடாது என்று எல்லாம் ஆனந்த் நிபந்தனை விதிக்கவில்லை. எனக்கு முழு சுதந்திரம் அளித்துள்ளார்.
கற்பனை
படுக்கையை பொறுத்தவரை ஆனந்த் கற்பனை திறனை பயன்படுத்த மாட்டார். ஆனால் அது எனக்கு பிடித்துள்ளது என்றார் சோனம். இப்படி படுக்கையறை விஷயத்தை சோனம் பப்ளிக்காக கூறியுள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது. முன்னதாக படுக்கை அறைக்குள் செல்போனை எடுத்து வரக் கூடாது என்று ஆனந்த் உத்தரவிட்டதாக சோனம் தெரிவித்தார்.