தொட்டாச் சிணுங்கி' அனன்யா!
நடிகை அனன்யா ரொம்ப சென்சிடிவ் டைப்பாம். யாராவது சத்தமாக பேசினாலோ அல்லது திட்டினாலோ உடனே அழுது விடுவாராம்.
நாடோடிகள் புகழ் அனன்யா அமைதியான பொண்ணு என்று தானே உங்களுக்குத் தெரியும். அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர் என்று உங்களுக்குத் தெரியுமா? நாடோடிகளை அடுத்து தற்போது ரிலீஸான எங்கேயும், எப்போதும் படம் அனன்யாவுக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்துள்ளது. இதனால் அவர் குஷியாக உள்ளார்.
மலையாளத்தில் சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். படங்களில் படு சுறுசுறுப்பாக, க்யூட்டாக தெரியும் அனன்யா, நிஜத்தில் தொட்டச் சிணுங்கியாம். யாராவது அதட்டுவது போலவோ அல்லது திட்டுவது போலவோ பேசினால், அவரால் தாங்கிக் கொள்ள முடியாதாம். உடனே அழுதுவிடுவாராம். அதுவும் ஓவென்று கதறி அழுவாராம்.
பொது இடமாக இருக்கிறதே இப்படி கதறி அழலாமா என்றெல்லாம் கூட பார்க்க மாட்டாராம்.
பச்சைக் குழந்தையை இனி யாரும் திட்டாதீங்கப்பா...!


Click it and Unblock the Notifications











