twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் முன்னால் எனக்கு பேச்சே வரலை - ஆன்ட்ரியா

    By Shankar
    |

    Andrea hails Kamal Hassan
    விஸ்வரூபம் படத்தின்போது, கமல் அருகிலிருக்கும்போது எனக்கு பேச்சே வராது. அவர் பெரிய ஜீனியஸ், என்றார் நடிகை ஆன்ட்ரியா.

    விஸ்வரூபம் படத்தில், கமலுடன் வந்து போகும் வேடத்தில் நடித்திருந்தாலும், படத்தின் வெற்ரி ஆன்ட்ரியாவை உற்சாகப்படுத்தியிருக்கிறது.

    முதல் பாகத்தில் டம்மி வேடம் என்றாலும் விஸ்வரூபத்தின் இரண்டாம் பாகத்தில்தான் ஆன்ட்ரியாவின் விஸ்வரூபத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள். அவ்வளவு முக்கியத்துவமாம் ஆன்ட்ரியாவுக்கு.

    "அதில் மிகை எதுவும் இல்லை. விஷயத்தைச் சொல்லித்தான் என்னை ஒப்பந்தம் செய்தார் கமல் சார் (என்னமா புளுகறாங்கப்பா... விஸ்வரூபம் எடுக்கும்போது, அதன் இரண்டாம் பாகம் குறித்து கமலுக்கு ஐடியாவே இல்லை!!)

    கமல் சாருடன் பெரும்பாலான காட்சிகளில் நானும் இருப்பது போல இரண்டாம் பாகம் அமைந்துள்ளது.

    கமல் சார் ஒரு நடிப்பு ஜீனியஸ். அவரிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். எப்பவும் நான் கொஞ்சம் அதிகமாகவே பேசுவேன். ஆனால், கமலுக்கு முன்னால் எனக்கு பேச்சே வராது.

    நான் அமைதியாக இருப்பதைப் பார்த்து அவரே பலமுறை என்னை கலாட்டா செய்துள்ளார். அதை நான் பெருமையாகக் கருதுகிறேன்," என்றார்.

    வெளியில் உங்களைப் பற்றி ஏகப்பட்ட காதல் கிசுகிசு உலா வருகிறதே, என்றால், "இந்த மாதிரி வதந்திகள் என்னை கவலைப்பட வைக்கின்றன. நான் ரொம்ப வெளிப்படையானவள். அதற்காக தனிப்பட்ட உறவுகளை இப்படி பப்ளிக்காக அசிங்கப்படுத்துவது தவறு. எனக்கு யாருடனும் காதல் இல்லை. காதலரும் இல்லை," என்றார்.

    English summary
    Actress Andrea Jermaia praised that Kamal is a genius and she plays big role in Viswaroopam 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X