Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
புதிய தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமானார் அஞ்சலி!
எங்கோ மாயமாகிவிட்டார் என்று கூறப்பட்ட நடிகை அஞ்சலி புதிய தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சித்தி கொடுமை என்று கூறிவிட்டு ஹைதராபாத் போய்விட்ட நடிகை அஞ்சலி அடிக்கடி 'மாயமாகிக்' கொண்டிருக்கிறார்.
சென்னை வர மறுப்பு
குறிப்பாக சென்னைப் பக்கம் தப்பித் தவறிக் கூட வருவதில்லை என்று உறுதி பூண்டவர் போல, நீதிமன்ற சம்மன்களைக் கூட கண்டு கொள்ளாமல் உள்ளார்.
இரண்டாவது முறை
கடந்த சில மாதங்களாக அவர் எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட யாருக்கும் தெரியாமல் போனது. ஆந்திராவில் அவரைத் தொடர்பு கொள்ள முயன்ற அத்தனை பேரும் அஞ்சலி போனை எடுக்கவில்லை என்றே தகவல் பரப்பினர்.
மீண்டும் நடிப்பு
இந்த நிலையில் தான் மீண்டும் நடிக்கப் போவதாக அறிவித்துள்ளார் அஞ்சலி. தான் ஹைதராபாதில்தான் இருப்பதாகவும், விரைவில் புதிய படம் நடிக்கவிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தொடர்பு
தன்னைப் பற்றி தவறான செய்திகள் வருவதாகவும், நிறைய வாய்ப்புகள் வந்தும் நல்ல கேரக்டர் வேண்டும் என்பதால் காத்திருந்ததாகவும் அவர் கூறினார்.
தெலுங்கில்..
தான் அடுத்து நடிக்கும் படம் தெலுங்கில் தயாராவதாகவும், அதில் தன் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் என்பதால் ஒப்புக் கொண்டதாகவும் கூறினார்.
கவர்ச்சியாக
"கவர்ச்சியாக நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். அதே நேரம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு முன்னுரிமை அளித்து நடிப்பேன். தமிழ்ப் படங்களில் நடிப்பது குறித்து யோசித்து வருகிறேன்," என்றார்.