Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க சரணடைகிறார் அஞ்சலி?
சென்னை: தன் மீது சென்னை நீதிமன்றங்களில் தொடரப்பட்டுள்ள வழக்குகளில் கைதாவதைத் தவிர்க்க, நீதிமன்றத்தில் சரணடைய முடிவு செய்துள்ளாராம் நடிகை அஞ்சலி.
சித்தி பாரதிதேவியும், டைரக்டர் களஞ்சியமும் கொடுமைபடுத்தியதாக பரபரப்பு பேட்டி அளித்து காணாமல் போய், பின் போலீசாரிடம் ஆஜரானவர் அஞ்சலி.
அன்றிலிருந்து சென்னைக்கே வராமல் ஹைதராபாதிலேயே தங்கியிருக்கிறார்.
தெலுங்குப் படங்களில் மட்டும் நடிக்கிறார். இந்த நிலையில் அஞ்சலிக்கு எதிரான வழக்குகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.
இயக்குநர் களஞ்சியம் சைதாப்பேட்டை, கோர்ட்டில் அஞ்சலி மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சித்தி பாரதிதேவி அஞ்சலி மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் ஜீவனாம்சம் தர வேண்டும் என்று குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அஞ்சலி கடைசியாக தமிழில் ஊர் சுற்றி புராணம் படத்தில் நடித்தார். இந்த படம் முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. படத்தின் இயக்குநர் களஞ்சியம் இதுகுறித்து நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர்கள் சங்கங்களில் அஞ்சலி மீது புகார் அளித்துள்ளார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் அஞ்சலிக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கல்களிலிருந்து வெளியில் வர வேண்டுமானால் உடனடியாக நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும்.
அதன் பிறகு ஊர் சுற்றிப் புராணத்தில் நடிக்க வேண்டும். எனவே முதலில் சரணடை முடிவுப செய்துள்ளாராம் அஞ்சலி.