twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கே.ஆர்.விஜயா, குஷ்பு பாணியில் அஞ்சலி

    By Siva
    |

    புன்னகை அரசி கே. ஆர். விஜயா, நடிகை குஷ்பு ஆகியோர் மாதிரி தெளிவான பெண்ணாக இருக்கிறார் நடிகை அஞ்சலி.

    நடிகை அஞ்சலி என்றால் நம் நினைவுக்கு வருவது அங்காடித் தெரு படம் தான். அந்த படத்தின் மூலம் தான் அவர் புகழ் பட்டி, தொட்டியெல்லாம் பரவியது. அண்மையில் வெளிவந்த எங்கேயும் காதல் படத்திலும் அவர் நடிப்பு பேசப்பட்டது. அதற்கு காரணம் அவர் கதாபாத்திரங்களை கவனமாக தேர்வு செய்கிறார்.

    அந்த காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த புன்னகை அரசி கே. ஆர். விஜயா ஹீரோக்களை விட கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு புறம் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகிய ஜாம்பவான்களோடு ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். மறுபுறம் நகைச்சுவை நடிகர் நாகேஷுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். அவரது பாணியில் தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளதா என்று பார்த்து, பார்தது நடித்தவர் குஷ்பு.

    தற்போது அந்த வரிசையில் நடிகை அஞ்சலி சேர்ந்துள்ளார். ஹீரோ யார் என்று பார்க்காமல், இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் எனக்கு பெயர் வருமா என்று பார்த்து நடிக்கிறார். அதனால் வெயிட்டான கதாபாத்திரங்களாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார்.

    உஷாரான பொண்ணு தான்...

    English summary
    Actress Anjali doesn't mind heroes but she is worrying about her role in the movie. Yester year heroines KR Vijaya and Kushboo had given importance to characters rather than heroes.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X