Don't Miss!
- Sports டை ஆன 2 டெஸ்ட்.. இரண்டிலும் பங்குபெற்ற ஆஸி. வீரர்.. இந்தியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் 9 விக்கெட்
- News 17 தொகுதிகளில் 20% ஓட்டுகளை தாண்டும் பாஜக.. எந்தெந்த இடங்கள் தெரியுமா? தந்தி டிவி கருத்து கணிப்பு
- Lifestyle செவ்வாய் பெயர்ச்சியால் ஏப்ரல் 23 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
- Automobiles மாருதி கார்களை வாங்க எப்போதுமே ஒரு பெரிய கூட்டம் இருக்கு!! மார்ச் மாதத்தில் நடந்தது என்ன?
- Finance ஒன்றுக்கும் மேற்பட்ட UAN நம்பர்களை ஆன்லைனில் இணைப்பது எப்படி? ரொம்ப ஈசி இதை பாலோ பண்ணுங்க..!
- Technology BSNL சூப்பர் பிளான்.. 50GB டேட்டா.. 3600 SMS.. 36 நாள் வேலிடிட்டி.. தரமான ப்ரீபெய்ட் திட்டம்? என்ன விலை?
- Travel தமிழ்நாட்டுக்கு உள்ளேயும், பக்கத்துலயும் இவ்வளோ அழகான பெரிய நீர்வீழ்ச்சிகள் இருக்கு தெரியுமா?
- Education யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் ரிலீஸ்..லக்னோ இளைஞர் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்
வாய்ப்புகளே இல்லை... கவர்ச்சிக் களத்தில் குதித்தார் அஞ்சலி
சென்னை: திரைப்படங்கள் ஒரு பெரிய உருவம் பெறுவது சிறிய குறும்படத்தில் இருந்து தான். அது போல குறும்படத்தில் நடித்து கொண்டு இருந்தவர் ஹீரோயின் ஆக அறிமுகமாகினார். அவர்தான் அஞ்சலி.
தனது கல்லூரி படிப்பில் இருந்தே குறும்படங்களில் அதிகம் நடித்து வந்தார் அஞ்சலி. அப்படி நடித்து வந்து கொண்டு இருந்த அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தெலுங்கு படமான போட்டோ மற்றும் பிரேமாலேகா ராசா படங்களில் நடித்தார்.
பின் ராம் இயக்கிய கற்றது தமிழ் படத்தில் நடித்து இன்று வரை நம் இதயங்களில் ஆனந்தியாக வாழ்ந்து வருகிறார்.இப்படத்தில் இவர் நடித்த ஆனந்தி கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.பின் பல படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கு பல பாராட்டுக்கள் பெற்று தந்த திரைப்படம் வசந்தபாலன் இயக்கிய அங்காடி தெரு.
இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. மற்றும் இப்படம் பல விருதுகளை குவித்தது.இப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. இதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. சில படங்கள் சரிவை சந்தித்தன பல படங்கள் வெற்றியையும் சந்தித்தன.
இவர் நடித்த எங்கேயும் எப்போதும் திரைப்படம் இவருக்கு அங்காடி தெரு படத்திற்கு பிறகு இவருக்கு ஒரு நல்ல மார்கெட்டை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியது மற்றும் இப்படத்திற்காகவும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுதை பெற்றார். இதன் பின் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தாலும் இவருக்கு இதற்கு முன்பு கிடைத்த வரவேற்பு தற்பொழுது கிடைக்கவில்லை.
ஆகையால் கவர்ச்சிபக்கம் குதித்து விட்டார் அஞ்சலி இவர் தற்போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஒரு பைக் அருகே நின்று கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி.