Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செருப்பால அடிப்பீரோ?... ஸ்டண்ட் மாஸ்ட்ர் மீது அஞ்சலி காட்டம்!
ஹைதராபாத்: அஞ்சலி போன்ற நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதை கேட்டு ஆத்திரம் அடைந்துள்ள அஞ்சலி அவர் மீது வழக்கு தொடர திட்டமிட்டுள்ளாராம்.
புதுமுக இயக்குனர் சஞ்சீவனின் வலியுடன் ஒரு காதல் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் களஞ்சியம் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் தனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியிலேயே நின்றதை பற்றி பேசினார்.
அஞ்சலி ஓடியதால்
நடிகை அஞ்சலி திடீர் என்று ஓடிவிட்டதால் எனது ஊர்சுற்றி புராணம் படம் பாதியில் நின்றுவிட்டது. இது குறித்து நான் நடிகர் சங்கம், இயக்குநர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், பெப்சி உள்ளிட்ட சங்கங்களில் புகார் கொடுத்தும் பலனில்லை என்று கூறி களஞ்சியம் வருத்தப்பட்டார்.
செருப்பால் அடிக்க வேண்டும்
களஞ்சியத்தை அடுத்து பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் கூறுகையில், இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்க மாட்டோம். அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி தூக்கி வந்து களஞ்சியம் படத்தில் நடிக்க வைப்போம் என்றார்.
அஞ்சலி ஆத்திரம்
ஜாக்குவார் தங்கத்தின் பேச்சு குறித்து கேள்விட்ட அஞ்சலி ஆத்திரம் அடைந்தாராம். எந்த சம்பந்தமும் இல்லாத அவர் எதற்காக என்னை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கடுப்பாகிவிட்டாராம். மேலும் ஜாக்குவார் தங்கம் மீது வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளாராம் அஞ்சலி.
நஷ்டஈடு
தன்னால் பாதிக்கப்பட்ட ஊர்சுற்றி புராணம் இயக்குனர் களஞ்சியத்திற்கு ஏதாவது நஷ்டஈடு வழங்கலாமா என்று அஞ்சலி யோசித்துக் கொண்டிருக்கிறாராம்.