Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஷூட்டிங்கிற்கு லேட்டாக வந்த அஞ்சலி.. அதிரடியாக ஹீரோயினை மாற்றிய படக்குழு!
பெங்களூர்: படப்பிடிப்புக்கு தாமதமாக வந்ததால் நடிகை அஞ்சலி, கன்னட நடிகர் தர்ஷன் படத்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் அஞ்சலி, கன்னடத் திரையுலகின் சூப்பர் ஹிட் நடிகரான தர்ஷன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
சக்கரவர்த்தி என்று பெயர் சூட்டப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் பகுதியில் தொடங்கியது. முதல்நாள் படப்பிடிப்பில் தர்ஷன்-அஞ்சலி காட்சிகளுடன் படத்தைத் தொடங்க படக்குழு திட்டமிட்டது.
இதனால் இயக்குநர் தொடங்கி மற்ற தொழில்நுட்பக் குழுவினர் வரை அனைவரும் வந்து அஞ்சலிக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பலமணி நேரங்கள் தாமதமாக அஞ்சலி படப்பிடிப்பிற்கு வந்தார்.
இதனால் முதல்நாளே தாமதமாக வரும் அஞ்சலி இப்படித் தொடர்ந்து தாமதமாக வந்தால் நமக்குத்தான் நஷ்டம் என்று நினைத்த படக்குழு, அவரை சக்கரவர்த்தி படத்திலிருந்து நீக்குவதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்திலிருந்தும் அவரை வெளியேற்றி விட்டனர். தற்போது அஞ்சலிக்குப் பதிலாக தீபா சன்னிதியை படக்குழு ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தில் தீபா சன்னிதி நாயகியாக நடித்திருந்தார்.