Don't Miss!
- News இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Automobiles ரூ6 லட்சம் தான் கார் விலை, 4 ஸ்டார் ரேட்டிங்கும் இருக்குது! ஆனா சேல்ஸ் சரியாக ஆகல! என்ன கார் தெரியுமா?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கவர்ச்சி போஸ்... நடிகை ஹன்சிபாவுக்கு கொலை மிரட்டல்
தனது கவர்ச்சிப் படங்களை பேஸ்புக்கில் வெளியிட்ட நடிகை ஹன்சிபாவுக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததால் நடிகை அதிர்ச்சியில் உள்ளார்.
அன்சிபா ஹாசன் கேரளாவைச் சேர்ந்தவர். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்.
தமிழில் பரஞ்சோதி என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து மணிவண்ணன் இயக்கிய அமைதிப்படை 2-ல் நடித்தார். அதன் பிறகு ஓரிரு தமிழ்ப் படங்கள்தான் கிடைத்தன.
எனவே மலையாளத்தில் நடிக்கப் போனார். அங்கு த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால், மீனா தம்பதியின் மூத்த மகள் கேரக்டரில் நடித்தார். இந்தப் படம் அவருக்கு பல புதிய வாய்ப்புகளை மலையாளத்தில் பெற்றுத் தந்துள்ளது.
ஏற்கெனவே அவர் கவர்ச்சியாக நடிக்கத் தயங்காதவர் என்பதால், புதிய படங்களில் ஏக கவர்ச்சி காட்டி வருகிறாராம்.
தனது கவர்ச்சிப் படங்களை சமீபத்தில் இணையதளங்களில் பரவ விட்டார். பேஸ்புக்கிலும் அவற்றைப் பதிவேற்றியுள்ளார். இதைப் பார்த்து பலர் பாராட்டினாலும், ஒரு முஸ்லிம் பெண் இந்த மாதிரி கவர்ச்சி காட்டுவதா என்று கடும் மிரட்டல் விடுத்துள்ளனர். சிலர் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் அன்சிபா அதிர்ச்சிக்குள்ளானார்.
இப்படி கவர்ச்சி காட்டுவது மதக் கொள்கைக்கு விரோதமானது. இந்த செயலுக்காக கடவுள் முன் தண்டனை கிடைக்கும் என்று மிரட்டி உள்ளனர். அன்சிபாவை மோசமான வார்த்தைகளால் திட்டியும் எச்சரித்தும் உள்ளனர். இதனால் அன்சிபா அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த விஷயத்தை காவல் துறைக்கு கொண்டு செல்லவும் யோசித்து வருகிறார்.