Don't Miss!
- News தஞ்சை பெரிய கோயில் தேரோட்டம்.. தஞ்சாவூர் மாவட்டம் முழுக்க இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Lifestyle ஆண்களே! அனைத்து பெண்களுக்கும் உங்கள பிடிக்கணுமா? அப்ப சாணக்கியர் சொல்லும் இந்த 6 குணங்களை வளர்த்துக்கோங்க!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
பாகுபலி படத்தை ரஜினிகாந்துக்குத்தான் முதலில் காட்ட ஆசை! - பிரபாஸ், அனுஷ்கா
பாகுபலி படத்தை முதலில் ரஜினிகாந்துக்குக் காட்டவே விரும்புவதாக நடிகை அனுஷ்கா மற்றும் பிரபாஸ் கூறினர்.
பாகுபலி படத்தின் ட்ரைலர்தான் இன்றைக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
இந்த ட்ரைலரை இணையத்தில் நேற்று வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் படத்தில் நடித்த பிரபாஸும் அனுஷ்காவும் பங்கேற்றனர்.
அப்போது பாகுபலியை முதலில் யாருக்கு திரையிட்டுக் காட்ட விரும்புகிறீர்கள் என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அனுஷ்கா, 'சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.
இதே கேள்வியை பிரபாஸுடம் கேட்டபோது, அவரும் 'ரஜினிகாந்துக்குதான் இந்தப் படத்தை முதலில் காட்ட விரும்புகிறேன்," என்றார்.
பாகுபலி படத்தை எஸ்எஸ் ராஜமவுலி இயக்கியுள்ளார். நேற்று வெளியான இந்தப் படத்தின் ட்ரைலரை ஆந்திரா - தெலங்கானா முழுவதும் உள்ள 1000-க்கும் மேற்பட்ட அரங்குகளில் இலவசமாகத் திரையிட்டுக் காட்டினர். திரையிட்ட அத்தனை அரங்குகளில் ட்ரைலரைப் பார்க்க மக்கள் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.