நானும் ஆட்டத்துல இருக்கேன்.. ரொம்ப நாள் கழிச்சு ஹாட் புகைப்படங்களை இறக்கி அசத்தும் அனுஷ்கா ஷர்மா!
மும்பை: பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா கிரேஸியா இந்தியா மேகஸினுக்காக ஹாட் போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
பிரபல பாலிவுட்டின் முன்னணி நடிகை மற்றும் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா ஷர்மா சமீப காலமாக பாலிவுட்டில் ஆக்டிவாக இல்லை.
இந்நிலையில், Grazia India மேகஸின் அட்டை படத்துக்காக அவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் சமூக வலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

படமே இல்லை
2008ம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளியான Rab Ne Bana Di Jodi படத்தின் மூலம் அறிமுகமானவர் அனுஷ்கா ஷர்மா. முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. அதற்கு பிறகு 2018ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நாயகியாக வலம் வந்த அனுஷ்கா, 2019ம் ஆண்டு ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜீரோ
2018ம் ஆண்டு பேய் படமான பரி, ராஜ்குமார் ஹிரானி இயக்கிய சஞ்சு, சுய் தாகா மற்றும் ஷாருக்கானின் ஜீரோ படங்களில் நடித்தார் அனுஷ்கா ஷர்மா. பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட ஜீரோ படம் படுதோல்வியை சந்தித்த பிறகு, ஷாருக்கான் அடுத்த படத்தை இன்னமும் தேர்வு செய்யாதது போல அனுஷ்கா ஷர்மாவும் தனது அடுத்த படத்தை தொடங்கவில்லை.
செம்ம செக்ஸி
இந்நிலையில், பிரபல ஃபேஷன் மேகஸின் ஆன Grazia India வின் அட்டைப் படத்திற்காக செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார் அனுஷ்கா ஷர்மா. அந்த போட்டோஷுட் புகைப்படங்கள் மற்றும் கிரேஸியா இந்தியா மேகஸின் அட்டைப் பட போஸ்டர்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார் அனுஷ்கா.
தொடையழகு
கண்களை மூடி அமர்ந்த படி போஸ் கொடுத்துள்ள அனுஷ்கா ஷர்மாவின் தொடையழகு தாராளமாக தெரிய பாலிவுட் ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் அனுஷ்கா ஷர்மா. ஒரு பக்க கூந்தல் ஒரு கண்ணை மறைக்க, கொஞ்சம் வெளிச்சம், கொஞ்சம் இருட்டு என வித்தியாசமாக எடுக்கப்பட்ட அந்த போட்டோஷூட் புகைப்படம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
சோ ஹாட்
பச்சை நிற சோபாவில் அமர்ந்தபடி உள்ளாடை தெரியும்படி அனுஷ்கா ஷர்மா கொடுத்துள்ள மற்றொரு போஸ் இணையத்தில் சூட்டைக் கிளப்பி உள்ளது. ஒரு வருடம் அனுஷ்கா ஷர்மா பாலிவுட்டில் ஆக்டிவாக இல்லாத நிலையில், பல புதிய நடிகைகள் பாலிவுட்டை ஆட்சி செய்து வந்தனர். இந்நிலையில், திரும்பவும் நான் வந்துட்டேன் என ரேஞ்சில் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட்டர்
இந்திய கிரிக்கெட் கேப்டன் விராத் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா, அடுத்ததாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி பயோபிக்கில் நடிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இரண்டு நாட்களுக்கு முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் மைதானத்தில் இருவரும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.

விரைவில்
கடந்த ஓராண்டாக சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்த அனுஷ்கா ஷர்மா, தற்போது நிறைய கதைகளை கேட்டு வருகிறார். ஜூலன் கோஸ்வாமியின் பயோபிக் கதையில் தான் முதலில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அனுஷ்கா ஷர்மா வெளியிடுவார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











