Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தேர்தல்: 'ஜீரோ பிளஸ் ஜீரோ' ஜீரோ தான்.. காங்கிரசுடன் கமல் கூட்டணி குறித்து எச் ராஜா
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்க செய்யப்போகும் மோசமான தவறு என்ன தெரியுமா? தெரியாமகூட இத பண்ணாதீங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
பொங்கல் பண்டிகையை எங்க, யாரோட கொண்டாட போகிறார்? ஓபனாக சொன்னார் அனுஷ்கா
சென்னை: பொங்கல் பண்டிகையை எப்படி, யாருடன் கொண்டாடப் போகிறேன் என்பதை தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.
அனுஷ்கா நடித்துள்ள படம், நிசப்தம். இதில் மாதவன், ஷாலினி பாண்டே, அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் வரும் 31 ஆம் தேதி வெளியாக உள்ளது.
ரொம்ப மோசம்... என் மேல கை வைக்கவே ஆர்வமாக வர்றாங்க... ஹீரோயின் அப்செட்

திருமணம்
இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அனுஷ்கா கலந்துகொள்ளவில்லை. அதில் கலந்துகொண்டால், தனது தனிப்பட்ட காதல், திருமணம் குறித்து கேட்பார்கள் என்பதால் அதைத் தவிர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.

தவிர்க்க முடியாமல்
இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள ஸ்டூடியோ ஒன்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் சென்றார் அனுஷ்கா. அங்கு செய்தியாளர்களை கண்டதும், தவிர்க்க முடியாமல் அவர்களிடம் பேசினார்.

அப்பா, அம்மாவுடன்
அப்போது, பொங்கல் பண்டிகையை எங்கு கொண்டாடப் போகிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பெங்களூரில் அப்பா, அம்மாவுடன் கொண்டாட இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார், 38 வயதான இந்த ஹீரோயின்.

பிரபாஸுடன் காதல்
தமிழ், தெலுங்கில் நடித்துவரும் அனுஷ்கா, தெலுங்கு ஹீரோ பிரபாஸை காதலித்து வருவதாகக் கூறப்பட்டது. இருவரும் மறுத்து வருகின்றனர். இருந்தாலும் இந்த கிசு கிசு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.