Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Lifestyle கோடையில் பால் கெட்டுப்போகாமல் இருக்க எளிய டிப்ஸ்..!
- News 2019 இல் மோடி ஆதரவு.. 2024 இல் கப்சிப்! 5 ஆண்டு ஆட்சியில் ரஜினி கனவை கண்டுகொள்ளாத பாஜக!
- Sports தீபக் சஹர் காயத்தின் நிலை என்ன? ஷர்துல் தாக்கூருக்கு மீண்டும் வாய்ப்பா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Finance ஒரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலிவுட்டிற்குப் பயணமாகிறார் அனுஷ்கா... மீண்டும் தள்ளிப் போகிறது திருமணம்?
மும்பை: கையில் உள்ள படங்களை முடித்து கொடுத்து விட்டு திருமணம், குடும்பம் என செட்டிலாகப் போகிறார் நடிகை அனுஷ்கா என செய்திகள் வெளியானது. ஆனால், இத்தகவல்களை பொய்யாக்கும் வகையில் பாலிவுட்டிற்குப் போகப் போகிறாராம் அனுஷ்கா.
அமன் கி ஆஷா படத்தை இயக்கிய இயக்குநர் இ நிவாஸ் தான் அனுஷ்காவை இந்தியில் அறிமுகப் படுத்தத் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கு ஜூவினைல் என பெயரிடப் பட்டுள்ளதாம். இக்கதைக்கு அனுஷ்கா பொருத்தமானவராக இருப்பார் என கருதியதால், அவரை அணுகியதாக இயக்குநர் நிவாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நிவாஸ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-
அனுஷ்காவிற்கான கதை...
இந்த கதையை அனுஷ்காவிற்காகவே தயாரித்துள்ளேன் எனக் கூறலாம். அவரிடம் கதையைச் சொன்னேன். அவருக்குப் பிடித்து விட்டது.
ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை...
இந்த படத்தின் பணிகள் மிக ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. இருப்பினும் அவர் தரப்பில் இருந்து எந்த முடிவும் சொல்லவில்லை.
கதைக்கு ஏற்ற நாயகி...
முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா இந்த படத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்பதாலேயே அவர் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம்.
பேச்சுவார்த்தை...
இம்மாத இறுதியில் அவரின் முடிவு பற்றிய இறுதியான அறிவிப்பு வெளியிடப்படும்.
ரீமேக் இல்லை...
ஜூவினைல் என இந்த படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ஏராளமான முன்னணி நடிகர்கள் இதில் நடிக்க உள்ளனர். இது புதிய கதை. ரீமேக் கிடையாது.
ஜனவரியில் ஷூட்டிங்...
பெண்களை மையமாகக் கொண்ட கதையும் இல்லை. இந்த படத்தில் நிறைய கதைகள் உள்ளன. அவை அனைத்தும் க்ளைமாக்சில் இணைக்கப்பட்டிருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்புக்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட உள்ளது என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
Baakiyalakshmi: வீட்டில் வாமிட் சத்தம் கேக்கனும்.. எழிலிடம் மல்லுகட்டிய ஈஸ்வரி.. இதுலதான் ட்விஸ்ட்!
-
மங்காத்தா என்ன பெரிய மங்காத்தா.. கோட் அதை விட பெரிய சம்பவம் செய்யப் போகுது.. அஜ்மல் ஓபன் டாக்!
-
ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!