Just In
- 3 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 4 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 5 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 6 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருக்கிறது..பிரபல ஹீரோயின் பரபரப்பு புகார்
சென்னை: சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருப்பது பற்றி பிரபல நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.
சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் தென்னிந்திய திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக, சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

பாலியல் புகார்கள்
தெலுங்கு நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

முன்னணி ஹீரோயின்
அவ்வப்போது பகீர் புகார்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். இந்த விஷயம் குறித்து சில நடிகைகள் புகார் தெரிவித்து இருந்தாலும் முன்னணி ஹீரோயின்கள் யாரும் இதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. அவர் நடித்துள்ள படம், சைலன்ஸ். இதில் மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உட்பட பலர் நடித்துள்ளனர்.

பிரமோஷன் நிகழ்ச்சி
ஹேமந்த் மதுக்கூர் இயக்கியுள்ள இந்தப் படத்தை கோனா வெங்கட், விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளனர். கோபி சுந்தர் இசை அமைத்துள்ளார். அடுத்த மாதம் இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதன் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், நடிகை அனுஷ்கா. அப்போது, வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறப்படுவது பற்றி அனுஷ்காவிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

இல்லை என்று
அவர் கூறும்போது, அதை இல்லை என்று என்னால் சொல்ல முடியாது எனச் சொன்னார், அனுஷ்கா. அவர் மேலும் கூறும்போது, ஆனால், எனக்கு அப்படி எந்த அனுபவமும் ஏற்படவில்லை. ஏனென்றால் நான் எப்போதும் வெளிப்படையாகவே இருந்திருக்கிறேன். இதுபோன்ற ஆதாயங்களை, பெண்களிடம் இருந்து சினிமா துறையினர் எதிர்பார்ப்பதும் தவறானது. தவிர்க்கப்பட வேண்டும்.

நிலைக்க வேண்டுமா?
எளிதான வழியில் சென்று குறைந்த புகழோடு இருக்க வேண்டுமா? கடினமாக உழைத்து நீண்ட காலம் சினிமாவில் நிலைக்க வேண்டுமா என்பதை அந்தந்த நடிகைகள்தான் முடிவு செய்ய வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். இதுவரை இந்த விஷயம் பற்றி கருத்துச் சொல்லாமல் இருந்த நடிகை அனுஷ்கா இப்போது தெரிவித்துள்ள இந்த கருத்து தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.