கொல்லூரை அடுத்து புத்தூர் கோவிலுக்கு சென்ற அனுஷ்கா: எல்லாம் டும் டும்முக்காக
பெங்களூர்: அனுஷ்கா புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.
அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் விரும்புகிறார்கள். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை கூட துவங்கிவிட்டார்களாம்.
அனுஷ்கா தற்போது பாக்மதி தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

படம்
பெற்றோர் ஒரு பக்கம் மாப்பிள்ளை பார்க்க அனுஷ்கா மறுபக்கம் படங்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையே அனுஷ்காவுக்கும், பிரபாஸுக்கும் இடையே காதல் என்று வேறு கிசுகிசுக்கப்படுகிறது.

கோவில்
கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள புத்தூர் ஸ்ரீ மகாலிங்கேஸ்வர கோவிலுக்கு அனுஷ்கா தனது குடும்பத்தாருடன் சென்று வழிபட்டுள்ளார். படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நேரத்தில் கோவிலுக்கு சென்றுள்ளார்.

மூகாம்பிகை
முன்னதாக அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். திருமண தடை நீங்க வேண்டி அவர் மூகாம்பிகை கோவிலுக்கு சென்றதாக கூறப்பட்டது.

பிரபாஸ்
அனுஷ்காவின் காதலர் என்று கிசுகிசுக்கப்படும் பிரபாஸுக்கு பெண் தேடி வருகிறார்கள். அவருக்கு அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











