அபர்ணாவின் புராணம் கருப்பழகி அபர்ணா மீண்டும் தமிழில் தலை காட்டத் தொடங்கியுள்ளார். கை நிறையப் படங்கள் இல்லை என்றாலும் இருக்கும்ஓரிரண்டு படங்களில் தனது முழுத் திறமையைக் காட்டி கலக்கி வருகிறாராம்.புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் மூலம் அறிமுகமானவர் லயோலா கல்லூரி கருப்புத் தேவதை அபர்ணா. அந்தப்படத்தில் அவர் காட்டிய கவர்ச்சிக்கு ஒரு புண்ணியமும் இல்லாமல் போய் விட்டது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால்,படிப்புச் சேவை மற்றும் நடனச் சேவைக்குத் திரும்பினார் அபர்ணா.திடீரென மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அங்கு அவர் காட்டிய கிளாமர், மலையாள ரசிகர்களைக் கவரவேஓரிரண்டு படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் தமிழ்ப் படங்கள் சில வீட்டுக் கதவைத் தட்டின. ஏபிசிடி படத்தில் மூன்றுநாயகிகளில் ஒருவராக வந்து போனார். இப்போது அவரது கையில் இருக்கும் ஒரே படம் மாமு. சிபிராஜுடன் ஜோடி சேர்ந்து இதில் நடித்து வருகிறார். இதற்காக சமீபத்தில் லண்டன் சென்று வந்துள்ளார் அபர்ணா. லண்டன்படப்பிடிப்பை மிகவும் அனுபவித்ததாக கூறும் அபர்ணா, யாரைப் பார்த்தாலும் இப்போது லண்டன் புராணத்தைக் கூறி விரட்டிவருகிறாராம்.மாமு வெளி வரட்டும், எனது நடிப்புத் திறமையை கோலிவுட் தெரிந்து கொள்ளும் என்று சந்தோஷமாக கூறும் அபர்ணா,தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக கூறுகிறார். அபர்ணாவுக்கான லண்டன் செலவை அவரே ஏற்றுக்கொண்டார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்கான செலவில் முக்கால்வாசியைஅபர்ணா தான் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டது.சிபியுடன் தான் நடித்திருக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும். இதைத் தொடர்ந்து மேலும் பல படவாய்ப்புகள் வந்துகுவியும் என்று தெரிந்தவர், அறிந்தவர்களிடமெல்லாம் கூறி மெய் சிலிர்க்கிறார் அபர்ணா. நடிப்புடன் கிளாமரிலும் கலக்குவேன் என்று கூறும் அபர்ணா, தான் ஒரு தமிழச்சி என்ற காரணத்தாலேயே நிறையப் படங்கள்வருவதில்லை என்றும் புலம்பிக் கொள்கிறார்.தமிழச்சியோ, தெலுங்கச்சியோ, மலையாளச்சியோ, கன்னடச்சியோ, நடிப்பு என்ற ஒரு மேட்டர் இருக்கிறதே, அதை மறந்தால்எப்படி வாய்ப்பு வரும்?
புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படம் மூலம் அறிமுகமானவர் லயோலா கல்லூரி கருப்புத் தேவதை அபர்ணா. அந்தப்படத்தில் அவர் காட்டிய கவர்ச்சிக்கு ஒரு புண்ணியமும் இல்லாமல் போய் விட்டது. எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லாததால்,படிப்புச் சேவை மற்றும் நடனச் சேவைக்குத் திரும்பினார் அபர்ணா.
திடீரென மலையாளப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அங்கு அவர் காட்டிய கிளாமர், மலையாள ரசிகர்களைக் கவரவேஓரிரண்டு படங்களில் நடித்தார். பின்னர் மீண்டும் தமிழ்ப் படங்கள் சில வீட்டுக் கதவைத் தட்டின. ஏபிசிடி படத்தில் மூன்றுநாயகிகளில் ஒருவராக வந்து போனார். இப்போது அவரது கையில் இருக்கும் ஒரே படம் மாமு.
மாமு வெளி வரட்டும், எனது நடிப்புத் திறமையை கோலிவுட் தெரிந்து கொள்ளும் என்று சந்தோஷமாக கூறும் அபர்ணா,தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தப் போவதாக கூறுகிறார். அபர்ணாவுக்கான லண்டன் செலவை அவரே ஏற்றுக்கொண்டார் என்றும் ஒரு தகவல் கூறுகிறது. ஏற்கனவே புதுக்கோட்டையிலிருந்து சரவணனுக்கான செலவில் முக்கால்வாசியைஅபர்ணா தான் ஏற்றுக் கொண்டார் என்று கூறப்பட்டது.
சிபியுடன் தான் நடித்திருக்கும் காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெறும். இதைத் தொடர்ந்து மேலும் பல படவாய்ப்புகள் வந்துகுவியும் என்று தெரிந்தவர், அறிந்தவர்களிடமெல்லாம் கூறி மெய் சிலிர்க்கிறார் அபர்ணா.
தமிழச்சியோ, தெலுங்கச்சியோ, மலையாளச்சியோ, கன்னடச்சியோ, நடிப்பு என்ற ஒரு மேட்டர் இருக்கிறதே, அதை மறந்தால்எப்படி வாய்ப்பு வரும்?


Click it and Unblock the Notifications