Don't Miss!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
மது குடிப்பது போல நடித்தால் கலாச்சார சீர்கேடா?: பிரியா ஆனந்த்
இப்பொழுதெல்லாம் டாஸ்மாக் சீன் இன்றி சினிமா இல்லை என்றாகிவிட்டது.
ஆண்களோடு பெண்களும் சரக்கடிப்பதுபோல சீன் வைக்க ஆரம்பித்து விட்டனர்.
சமர் படத்தில் சரக்கடித்த த்ரிஷா அதற்கு ஒரு விளக்கம் கொடுத்திருந்தார். அதேபோல ப்ரியா ஆனந்த் சமீபத்தில் ரிலீசான அரிமா நம்பி படத்தில் மது அருந்துவது போல நடித்திருந்தார். அதற்கு ஒரு நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார்.
மது குடித்து சர்ச்சை
ஹீரோ உடன் அமர்ந்து, மது குடிப்பது போல் நடித்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் பிரியா ஆனந்த்.
சரி சமம்தான்
ஆண்களும், பெண்களும் சமம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுக்கும் வகையிலேயே, இந்த காட்சியை அமைத்துள்ளதாக, படக்குழு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கருத்து போய் சேரும்
இதை, ப்ரியா ஆனந்தும் வரவேற்றுள்ளார். அவர் கூறுகையில், 'அந்த காட்சியில் அப்படி நடித்தால் தான், நாம் சொல்ல வரும் கருத்து, மக்களை சென்றடையும் என, இயக்குனர் கூறியதால், அப்படி நடித்தேன்.
கலாச்சார சீரழிவா?
ஒரு பெண், இப்படி நடந்து கொள்வதால் தான், கலாசாரம் சீரழியும் என்று யாராவது கூறினால், அதை என்னால் ஏற்க முடியாது' என்கிறார், ப்ரியா ஆன்ந்த்.