Don't Miss!
- News யாருக்கோ தூக்கம் போயிட்டுனு சொல்றாங்க.. ஸ்டாலின், உதயநிதிக்கு தான் தூக்கம் போய்விட்டு.. எடப்பாடி
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
என்னாது, நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட்டா?
சென்னை: நடிகை த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக ரசிகர்கள் நடிகை த்ரிஷா மீது கோபத்தில் உள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பீட்டா அமைப்பை அவர் ஆதரிப்பதே ரசிகர்களின் கோபத்திற்கு காரணம்.
இந்நிலையில் த்ரிஷாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சாக கிடக்கிறது.
பிடிவாரண்ட்
பிடிவாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு த்ரிஷா என்ன செய்தார் என்று விசாரித்தபோது பிடிவாரண்ட் அவரது தாய் உமா கிருஷ்ணனுக்கு பிறப்பிக்கப்பட்டது தெரிய வந்தது.
வழக்கு
தனது மகள் த்ரிஷாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டதாக உமா பத்திரிகை ஒன்று மீது கடந்த 2005ம் ஆண்டு அவதூறு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை த்ரிஷா அண்மையில் வாபஸ் பெற்றார்.
உமா
அவதூறு வழக்கு விசாரணையின்போது உமா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து சென்னை நீதிமன்றம் உமா கிருஷ்ணனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
த்ரிஷா
ஜல்லிக்கட்டு விவகாரத்தால் விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில் த்ரிஷாவுக்கு எதிராக தான் அந்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது என்று தவறான தகவல் பரவிவிட்டது.