Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கமுக்கமாக கோர்ட்டில் சரணடைந்துவிடலாமா: வக்கீல்களுடன் அஞ்சலி ஆலோசனை
ஹைதராபாத்: இயக்குனர் களஞ்சியம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத நடிகை அஞ்சலிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்யலாம் என்று அஞ்சலி வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.
இயக்குனர் களஞ்சியம் தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை அஞ்சலி புகார் தெரிவித்தார். இந்த புகாரை மறுத்த களஞ்சியம் அஞ்சலி மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை பல முறை நடந்துள்ளது. ஆனால் அஞ்சலி ஆஜராகவில்லை. இந்நிலையில் நேற்று அஞ்சலி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டிருந்தும் அவர் வரவில்லை.
அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஞ்சலிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் வர முடியவில்லை என்றார். இதையடுத்து அஞ்சலிக்கு ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணை அடுத்த மாதம் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து அஞ்சலி எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க என்ன செய்வது என்பது பற்றி அஞ்சலி ஹைதராபாத்தில் தனது வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறாராம். பத்திரிக்கையாளர்களுக்கு தெரியாமல் நீதிமன்றத்தில் சரண் அடைந்து பிடிவாரண்ட்டை ரத்து செய்யக் கோரலாமா அல்லது மருத்துவ சான்றிதழ் அளிக்கலாமா என்றும் ஆலோசித்து வருகிறாராம்.