Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ஆஷிமா நர்வால் லேட்டஸ்ட் பிக்ஸ்.. சேலையில் இவ்வளவு அழகா.. ரசிக்கும் ரசிகர்கள்!
மும்பை : குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் ஆஷிமா நர்வால்.
Recommended Video
2015 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா குலோபல் விருதை வென்ற ஆஷிமா நர்வால். தெலுங்கு தமிழ் போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் நாடகம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமாகி ஜெஸ்ஸி, தமிழிலில் விஜய்ஆண்டனிக்கு ஜோடியாக கொலைகாரன் படத்தில் நடித்துள்ளார். அந்தபடத்தில் மிகவும் இயல்பாக, அமைதியான பெண் கதாபாத்திரத்தை ஏற்று நடத்திருப்பார். மேலும், ராஜபீமா என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றன.
உலக நாயகனின் கிளாசிக் படங்கள்.. எப்போதுமே கமல் தான் டாப்.. மெய்சிலிர்க்கும் ரஞ்சித் ஜெயகொடி !
தற்போது ஊரடங்கு சமயம் என்பதால் அனைத்து நடிகர், நடிகைகளும் தங்களது வீட்டிலிருந்தபடியே அவர்கள் செய்யும் அன்றாட வேலைகளை வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர்.
பல நடிகைகள் கிளாமரான போட்டோக்களை பதிவிட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஆஷிமா நர்வால் குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களுக்கு விருந்து அளித்துக் கொண்டிருக்கிறார்.
கேரளத்து சேலையிலும் விதவிதமான சேவைகளிலும் பார்ப்பதற்கு அழகாகவே இருக்கிறார் ஆஷிமா நர்வால். இதனை பார்க்கும் ரசிகர்கள் சேலையில் நீ இவ்வளவு அழகா என்று நல்ல பாசிடிவ் கமெண்ட்ஸ்களையே கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு நடிகைகளுக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் அந்த வகையில், ஆஷிமா இன்ஸ்டா புகைப்படங்களை வெளியிடுவதிலும் தனக்கென ஒரு ஸ்டைலை ஃபாலோ செய்கிறார்.
அது என்னவென்றால் தனது இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு கார்னர்களிலும் அவரது ஒரே மாதிரியான போட்டோவும் இரு போட்டோக்களில் இடையில் அவர் எந்த நிற உடை அணிந்து இருக்கிறாரோ அதற்கு ஏற்றவாறு அதே நிறத்தில் சில வாசகங்கள் இருக்குமாறு புகைப்படத்தை வெளியிட்டு கொண்டிருக்கிறார்.
அவர் வெளியிடும் இந்த ஸ்டைல் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவே இருக்கிறது. பெரும்பாலும் கிளாமரை விரும்பும் பல கதாநாயகிகளுக்கு மத்தியில் இவர் இந்த மாதிரியான குடும்பப்பாங்கான அழகான புகைப்படங்களை வெளியிடுவது அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
கூடிய விரைவில் இவர் நடித்திருக்கும் ராஜபீமா படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ரசிகர்களும் இந்த படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் ஆரவ், கே.ஸ் .ரவிக்குமார், நாசர், யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஓவியா, யாஷிகா ஆனந்த் இவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.