twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலை... தாகம்.. தொழில் அதிபர்...அசின்

    By Siva
    |

    Asin
    நடிகை அசின் தீராத கலைத்தாகத்தால் தான் திரையுலகிற்கு வந்தார் என்று கூறப்படுகிறது.

    கேரளாவில் நடிகை அசினுக்கு சொந்தமாக பல தொழிற்சாலைகள் உள்ளன. அம்மணி அதை நிர்வகிப்பதில் கில்லாடியாகவும் உள்ளார். கைவசம் தொழில் இருக்க அசின் எதற்கு நடிக்க வந்தார் என்று தானே நினைக்கிறீர்கள். அவருக்கு தீராத கலைத்தாகமாம். அதனால் தான் நடிக்க வந்தாராம்.

    ஆரம்பத்தில் கோலிவுட்டிலும், பின்னர், தெலுங்கிலும் பிரமாதப்படுத்திய அசின் தற்போது பாலிவுட்டிலும் தனது கொடியை உயரப் பறக்க விட பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார். பாலிவுட்டில் எப்பாடுபட்டாவது பெரிய ஆளாகிவிட வேண்டும் என்பதில் குறியாய் உள்ளார். இதனால் கோலிவுட், தெலுங்கில் வரும் வாய்ப்புகளைப் புறம் தள்ளி வருகிறார்.

    கஜினி தன்னை உயரத்தில் உட்கார வைத்ததைத் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக உட்கார்ந்து கொள்ளும் திட்டத்தில் இருக்கும் அசினுக்கு, கஜினிக்குப் பிறகு அதேபோல ஒரு சூப்பர் டூப்பர் படம் அமையாதது கவலையாகவும், வருத்தமாகவும் இருக்கிறதாம்.இருந்தாலும் விடாமல் தொடர்ந்து முன்னணி நடிகையாக திகழத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கிறாராம்.

    எப்படியோ 'தாகம்' தீர்ந்தா சரிதான்...!

    English summary
    Actress Asin owns factories in her native Kerala. She chooses to be an actress as she has an unquenchable thirst for acting.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X