Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆசினின் ஆசை.. ஆசை நான் யாருடைய இடத்துக்காகவும் போட்டியிடவில்லை. எனது பாதை தனி, எனது வழியில் நான் ஜாலியாக போய்க்கொண்டிருக்கிறேன் என்கிறார் மஜா நாயகி ஆசின்.ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்து வருகிறார் ஆசின். விக்ரமுடன் மஜா,விஜய்யுடன் சிவகாசி என கலக்கிய ஆசின், சூர்யாவுடன் நடித்த கஜினியில் கல்பனா கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.இப்போது அஜீத்துடன் காட் பாதர் படத்தில் நடித்து வரும் ஆசின், தான் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால்படு ஜாலியாக உள்ளார். அந்த ஜாலியுடன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.கடவுள் அருள் பிளஸ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இவை இரண்டும் தான் எனது தொடர் வெற்றிக்குக் காரணம். அதனால்இந்த இருவருக்குமே எனது கோடானு கோடி பாராட்டுக்கள்.தமிழ் சினிமாவில் நான் முன்னணி நடிகை என்று கூறுகிறார்கள். கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ஆனாலும் எனக்குள் அப்படிஎந்த எண்ணமும் இல்லை. நான் எந்த இடத்தையும்,யாருடைய இடத்தையும் பிடிக்க முயற்சிக்கவில்லை. எனது பாதை தனி,எனது நடிப்பு ஸ்டைல் தனி. என் பாட்டுக்கு நான் ஜாலியாக எனது பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன். சிம்ரன் இடத்தை நான் பிடித்து விட்டதாக கூறுவதை ஏற்க மாட்டேன். அவர் எங்கே, நான் எங்கே? ஆனால் சிம்ரனைப் போலசீரியஸ் ரோலிலும் கலக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் மனசுக்குள் உள்ளது. நிச்சயம் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும்.கஜினியில் எனக்கு நல்ல ரோல் கிடைத்தது. அதற்காக இயக்குனர், நடிகர் சூர்யா ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தரோலில் வெயிட்டாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களுடன் அமர்ந்து அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரசிகர்களின்கிளாப்ஸ் இன்னும் காதுகளில் சுற்றிக் கொண்டுள்ளது.அதே போலத்தான் மஜா மற்றும் சிவகாசி. இந்த படங்களையும் ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் பார்த்தேன். ரசிகர்களின்பாராட்டு மழையில் நனைந்து வெளியே வந்தேன். இந்த சந்தோஷம் போதும். நல்ல ரோல்களில் நடித்து, ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும் என்ற ஒரே லட்சியம் தான் என்னிடம்.ரஜினி சாருடனும் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் சிவாஜியில் என்னை நடிக்கக் கூப்பிடவில்லையே, நான் என்ன செய்வதுஎன்று அங்கலாய்ப்புடன் நிறுத்தினார் ஆசின். சமீபத்தில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் தெலுங்குப் பட வாய்ப்பை வேண்டாம் என்று மறுத்திருக்கிறார் ஆசின். விஜய் நடித்ததிருப்பாச்சி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறார் ரத்னம். இதில் த்ரிஷா ரோலில் நடிப்பதற்கு ஆசினிடம் கால்ஷீட் கூடவாங்கிவிட்டார்களாம்.பின்னர் திருப்பாச்சி படததை அம்மணிக்கு தனி ஷோவாகப் போட்டு காண்பித்தார்களாம்.படத்தைப் பார்த்து முடித்த ஆசின் தனக்கு தகுந்தாற் போல கேரக்டர் வெயிட்டா இல்லை என்று கூறியதோடு, படத்தில சீன்களைமாத்தி எனக்கு அதிக வெயிட் தந்தா நடிக்கிறேன் இல்லாட்டி அட்வான்ஸைத் திருப்பித் தந்துடுறேன் என்றாராம்.இதனால் ரத்னமும், டைரக்டரும் படு டென்ஷன் ஆகி ஆசினை படத்திலிருந்து தூக்கியே விட்டார்களாம்.அதே போல சமீபத்தில் மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு ஆசின் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா டைரக்டர்கள் மீது பாய்ச்சல்காட்டியுள்ளார்.தமிழில் சொன்னபடி காட்சிகளைப் படமாக்க மாட்டேன் என்கிறார்கள் என்று அவர் தந்துள்ள பேட்டியால் பல கோடம்பாக்கம்இயக்குனர்கள் எரிச்சலில் இருக்கிறார்களாம்.இது எந்தானு ஆசின் சேச்சி?
ஒரே நேரத்தில் தமிழ் சினிமாவின் அத்தனை முன்னணி நாயகர்களுடனும் நடித்து வருகிறார் ஆசின். விக்ரமுடன் மஜா,விஜய்யுடன் சிவகாசி என கலக்கிய ஆசின், சூர்யாவுடன் நடித்த கஜினியில் கல்பனா கதாபாத்திரத்தில் அசத்தியிருந்தார்.
இப்போது அஜீத்துடன் காட் பாதர் படத்தில் நடித்து வரும் ஆசின், தான் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால்படு ஜாலியாக உள்ளார். அந்த ஜாலியுடன் அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை.
கடவுள் அருள் பிளஸ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இவை இரண்டும் தான் எனது தொடர் வெற்றிக்குக் காரணம். அதனால்இந்த இருவருக்குமே எனது கோடானு கோடி பாராட்டுக்கள்.
தமிழ் சினிமாவில் நான் முன்னணி நடிகை என்று கூறுகிறார்கள். கேட்கவே சந்தோஷமாக உள்ளது. ஆனாலும் எனக்குள் அப்படிஎந்த எண்ணமும் இல்லை. நான் எந்த இடத்தையும்,யாருடைய இடத்தையும் பிடிக்க முயற்சிக்கவில்லை. எனது பாதை தனி,எனது நடிப்பு ஸ்டைல் தனி. என் பாட்டுக்கு நான் ஜாலியாக எனது பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறேன்.
கஜினியில் எனக்கு நல்ல ரோல் கிடைத்தது. அதற்காக இயக்குனர், நடிகர் சூர்யா ஆகியோருக்கு நன்றி சொல்ல வேண்டும். அந்தரோலில் வெயிட்டாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ரசிகர்களுடன் அமர்ந்து அந்தப் படத்தை தியேட்டரில் பார்த்தேன். ரசிகர்களின்கிளாப்ஸ் இன்னும் காதுகளில் சுற்றிக் கொண்டுள்ளது.
அதே போலத்தான் மஜா மற்றும் சிவகாசி. இந்த படங்களையும் ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் பார்த்தேன். ரசிகர்களின்பாராட்டு மழையில் நனைந்து வெளியே வந்தேன். இந்த சந்தோஷம் போதும்.
நல்ல ரோல்களில் நடித்து, ரசிகர்களிடம் நல்ல நடிகை என்ற பெயரைப் பெற வேண்டும் என்ற ஒரே லட்சியம் தான் என்னிடம்.
ரஜினி சாருடனும் நடிக்க ஆசையாக உள்ளது. ஆனால் சிவாஜியில் என்னை நடிக்கக் கூப்பிடவில்லையே, நான் என்ன செய்வதுஎன்று அங்கலாய்ப்புடன் நிறுத்தினார் ஆசின்.
பின்னர் திருப்பாச்சி படததை அம்மணிக்கு தனி ஷோவாகப் போட்டு காண்பித்தார்களாம்.
படத்தைப் பார்த்து முடித்த ஆசின் தனக்கு தகுந்தாற் போல கேரக்டர் வெயிட்டா இல்லை என்று கூறியதோடு, படத்தில சீன்களைமாத்தி எனக்கு அதிக வெயிட் தந்தா நடிக்கிறேன் இல்லாட்டி அட்வான்ஸைத் திருப்பித் தந்துடுறேன் என்றாராம்.
இதனால் ரத்னமும், டைரக்டரும் படு டென்ஷன் ஆகி ஆசினை படத்திலிருந்து தூக்கியே விட்டார்களாம்.
அதே போல சமீபத்தில் மலையாளப் பத்திரிகை ஒன்றுக்கு ஆசின் அளித்த பேட்டியில் தமிழ் சினிமா டைரக்டர்கள் மீது பாய்ச்சல்காட்டியுள்ளார்.
தமிழில் சொன்னபடி காட்சிகளைப் படமாக்க மாட்டேன் என்கிறார்கள் என்று அவர் தந்துள்ள பேட்டியால் பல கோடம்பாக்கம்இயக்குனர்கள் எரிச்சலில் இருக்கிறார்களாம்.
இது எந்தானு ஆசின் சேச்சி?