Don't Miss!
- News ரூ 4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.. மே 2ல் காவல் துறையில் ஆஜராவேன்.. நயினார் நாகேந்திரன்
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கையில பீப்பி.. சேலையில செம க்யூட்.. இவ்ளோ அழகான பூம் பூம் மாட்டுக்காரியை பார்த்து இருக்கமாட்டீங்க!
சென்னை: கோவை பொண்ணு அதுல்யா ரவி, தமிழ் ரசிகர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
காதல் கண் கட்டுதே, கேப்மாரி, நாடோடிகள் 2, அடுத்த சாட்டை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் அதுல்யா.
சமூக வலைதளங்களில் இருக்கும் தனது கோலிவுட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் விதமாக புதிய புகைப்படங்களை இறக்கி உள்ளார்.
உங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
|
பூம் பூம் மாட்டுக்காரி
தமிழ் புத்தாண்டு அதுவுமாக கையில் பீப்பியுடன் பூம் பூம் மாட்டுக்காரி போல இருக்கும் புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் நடிகை அதுல்யா ரவி பதிவிட்டுள்ளார். இது ஏதாவது படத்திற்காக எடுத்த புகைப்படங்களா? அல்லது போட்டோஷூட் புகைப்படங்களா என ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.
தமிழச்சி
கோவையை சேர்ந்த தமிழ் பொண்ணு அதுல்யா ரவி, தைப்பூசம் திருநாளை முன்னிட்டு, முருகர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வைரலாக்கினார். இந்நிலையில், இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
வீட்டுக்குள் இருப்போம்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மட்டுமின்றி, "வீட்டுக்குள் இருப்போம்.. பேரன்பும், பெருமகிழ்வும் கொள்வோம்" எனவும் கொரோனா குறித்த விழிப்புணர்வு பதிவாகவும் இதனை வெளியிட்டுள்ளார் அதுல்யா ரவி. கொரோனா பாதிப்பால், கோலாகலமாக கொண்டாடப்படும் தமிழ் புத்தாண்டு களையிழந்து காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
|
நோயில்லாமல்
கொரோனா வைரஸ் பரவியதற்கு பிறகு, பலரும் செல்வங்கள் பெற்று வாழ்க என்று வாழ்த்துவதை தவிர்த்துவிட்டு, நோயில்லாமல் ஆரோக்கியத்துடன் வாழுங்கள் என வாழ்த்தி வருகின்றனர். அதுல்யாவின் இந்த ரசிகர், "நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் இந்த புத்தாண்டு கொடுக்கும் என வாழ்த்தியுள்ளார்.
|
ரசிகர்கள் கலாய்
என்னாச்சு அதுல்யா, தமிழ் புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்ல எதுக்கு பூம் பூம் மாட்டுக்காரி வேஷம் போட்டு இருக்கீங்க என்றும், அது பூம் பூம் மாடு தானே என்றும் சில ரசிகர்கள் அதுல்யாவை ஜாலியாக கலாய்த்து வருகின்றனர். ஏதோ ஏற்கனவே எடுத்த போட்டோஷூட் போட்டோவை இன்னைக்கு போட்டிருக்காரு போல என்றும் கிண்டலடித்துள்ளனர்.
மாஸ்டர் நடிகர்
தளபதி விஜய்யின் தீவிர ரசிகையான அதுல்யா ரவி, மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாந்தனு பாக்கியராஜ் அடுத்து நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட் ஆகி உள்ளார். லாக்டவுன் அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக தான் அதுல்யா - சாந்தனு நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.