Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஸ்ரேயாவைக் கட்டாயப்படுத்தி மன்னிப்பு கடிதம் வாங்கிய படக்குழு!
சூப்பர் ஸ்டாருக்கே ஜோடி போட்ட ஸ்ரேயாவின் நிலை இப்போது மோசம். பாபநாசம் ஹிந்தி ரீமேக்கில் அம்மா கேரக்டரில் நடித்தவர் இப்போது சிம்புவுக்கும் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இப்படி வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் ஸ்ரேயா தெலுங்கில் மூத்த நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக கவுதமி புத்ர சடர்கனி என்ற படத்தில் நடிக்கிறார். பாலகிருஷ்ணாவுக்கு ஸ்ரேயாவின் தாத்தா வயது.
பரபரப்புக்காக எதையாவது பேசிக்கொண்டும் செய்துகொண்டும் இருக்கும் ஸ்ரேயா இந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த ஸ்டில்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். இன்னும் படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக்கே வராத நிலையில் காட்சிகளின் ஸ்டில்கள் வந்ததால் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் உள்ளிட்ட எல்லோருக்குமே டென்ஷன்.
ஸ்ரேயாவைக் கண்டித்த படக்குழு 'இனி இப்படி செய்ய மாட்டேன்' என்று பள்ளி மாணவி கணக்காக மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியிருக்கிறது. இந்த கடிதம் எழுதி வாங்கும்போது பாலகிருஷ்ணாவும் உடன் இருந்திருக்கிறார்!