Don't Miss!
- Lifestyle 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Sports ஒய்டு கொடுத்த நடுவர்.. ரிவ்யூ கேட்ட பும்ரா.. சந்தேகமாய் பார்த்த ஹர்திக்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- News அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் கொல்ல சதித்திட்டம்? இன்சூலின் கொடுக்க மறுப்பு? பகீர் கிளப்பிய அதிஷி
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மலையாளப் படங்களில் நடிக்க ரீமா கலிங்கலுக்கு தடை!
பரத் ஜோடியாக யுவன் யுவதி தமிழ் படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.
மலையாள நடிகர், நடிகைகள், டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் யாரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் இல்லை.
ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி மிடுக்கி என்ற மலையாள டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சுரேஷ் கோபியும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளை முடித்த பிறகே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.