Don't Miss!
- News விவசாய நிலங்கள்.. கோடிக்கணக்கில் சொத்து.. அமித்ஷாவின் ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு தெரியுமா?
- Sports என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
மலையாளப் படங்களில் நடிக்க ரீமா கலிங்கலுக்கு தடை!
பரத் ஜோடியாக யுவன் யுவதி தமிழ் படத்தில் நடித்தவர் ரீமா கல்லிங்கல். மலையாளத்தில் முன்னணி நடிகை இவர்.
மலையாள நடிகர், நடிகைகள், டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்க கேரள திரைப்பட வர்த்தக சபை தடை விதித்து உள்ளது. இதனால் நடிகர், நடிகைகள் யாரும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதும் இல்லை.
ஆனால் ரீமா கல்லிங்கல் இதை மீறி மிடுக்கி என்ற மலையாள டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. மலையாள நடிகர்கள் சித்திக், ஜெகதீஷ் ஆகியோர் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தனர். தடை விதிக்கப்பட்டதும் அதில் இருந்து விலகினர். ஆனால் ரீமா கல்லிங்கல் மட்டும் தடையை பொருட்படுத்தாமல் டி.வி. நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதையடுத்து மலையாளப் படங்களுக்கு ரீமா கல்லிங்கலை ஒப்பந்தம் செய்யக்கூடாது என்று கேரள திரைப்பட வர்த்தக சபை அதிரடி தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் சுரேஷ் கோபியும் டி.வி. நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளை முடித்த பிறகே சினிமாவில் நடிப்பேன் என்று அறிவித்ததால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.