Don't Miss!
- News நீ ஹெல்ப்பர் கேள்வி கேட்காதே.. அரசு வண்டியில் பீர் குடித்த இபி ஆபிசர்.. மறக்க முடியாத பரிசு..வீடியோ
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
பார்த்து எவ்ளோ நாளாச்சு.. பூலான்தேவியை மறக்க முடியுமா? சின்னத்திரைக்கு மீண்டும் வருகிறார் சீமா
சென்னை: பூலான் தேவியாக கலக்கிய நடிகை, இப்போது சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்க இருக்கிறார்.
பூலான் தேவியின் வாழ்க்கைக் கதையை மையமாக கொண்டு, பண்டிட் குயின் என்ற படத்தை 1994 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார், சேகர் கபூர்.
இந்தப் படம் பிரபலமான, கான் ஃபிலிம் பெஸ்டிவல் உட்பட பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்றது.
கலக்கல் கறுப்பு சேலை.. ஜிவ்வென்று இழுக்கும் ஸ்லிம் அழகுடன்.. பேரழகி தேவசேனா.. வைரலாகும் போட்டோக்கள்
தேசிய விருது
இதில், பூலான் தேவியாக நடித்து அசத்தி இருந்தவர், சீமா பிஸ்வாஸ். இதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் அவர் பெற்றிருந்தார்.
இயற்கை
ஏராளமான இந்தி, மலையாள படங்களில் நடித்துள்ள இவர், தமிழில் ஜனநாதன் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற இயற்கை, சரத்குமாரின் தலைமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.
சின்னத்திரை
அழுத்தமான கேரக்டர்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் அவர், கடந்த சில வருடங்களாக அதிகமாக நடிக்கவில்லை. சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்த அவர், அதில் நடிப்பதையும் நிறுத்தி இருந்தார்.
சினிமா வாய்ப்பு
இந்நிலையில் அவர் இந்தி சின்னத்திரை தொடரில் மீண்டும் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, சின்னத்திரை தொடரில் நடிக்கும்போது, காலையில் இருந்து மாலை வரை, ஸ்பாட்டிலேயே இருக்க வேண்டும். இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் போய்விடும்.
சூரஜ் பரஜத்யா
இதனால் கடந்த 5 வருடமாக தொடர்களில் நடிக்கவில்லை. இயக்குனர் சூரஜ் பரஜத்யா இப்போது என்னைக் கேட்டுக்கொண்டதால், அவரது தாதி அம்மா தாதி அம்மா மான் ஜோ என்ற தொடரில் நடிக்கிறேன். இதில் ஜாலியான பாட்டியாக வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.