Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகை சனாகானுக்கு பீடி பாக்கெட் பார்சல்!
சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சனாகான். சமீபத்தில் ரிலீசான பிரகாஷ்ராஜின் 'பயணம் படத்திலும் நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் பெண்கள் புகைப்பிடிப்பதை நியாயப்படுத்துவது போல் சனாகான் கருத்து தெரிவித்திருந்தார்.
புகைப்பிடிப்பதால் தப்பில்லை. அதுவும் பெண்கள் புகைப்பிடித்தால் அவர்களின் உடல் ஸ்லிம்மாகும். எனவே ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட் பிடிக்கலாம் என அவர் கூறியிருந்தார்.
இதனை இந்து மக்கள் கட்சி கண்டித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் சி.ஆர்.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெண்கள் தினமும் மூன்று சிகரெட் பிடிப்பது தப்பில்லை என்றும் புகை பழக்கத்தால் உடல் மெலிதாகும் என்றும் சனாகான் கூறியுள்ளார்.
சிகரெட்டில் வரும் வரி வருமானம் பல மடங்கு தொகையை அரசு புற்று நோயை ஒழிக்க செலவிடுகிறது. சிகரெட்டால் நிகழும் புற்று நோய் சாவுகள் பெருகி வருகின்றன. இந்த பழக்கத்தை ஒழிக்க தன்னார்வ அமைப்புகளும் அரசாங்கங்களும் கடும் முயற்சிகள் எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சினிமாவால் பாப்புலரான சனாகான் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆதரவாக பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற விஷயங்களை வெளிப்படையாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
சனாகானுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அவருக்கு சிகரெட் மற்றும் பீடி பாக்கெட்டுகளை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம்."
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.