Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பானுவின் 'மூன்று'
ஹரி இயக்கத்தில் வெளியான தாரமிபரணியில் முதலில் நயனதாராதான் நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால் அவரது கால்ஷீட் கிடைக்காததால், கேரளாவிலிருந்து பானுவைக் கூட்டி வந்து நடிக்க வைத்தார் ஹரி.
ஹரியின் அறிமுகமான நயனதாரா மிகப் பெரிய ரேஞ்சுக்கு உயர்ந்தது போல பானும் பலே உயரத்தை எட்டுவார் என கூறப்பட்டது. ஆனால் பானுவோ, முதல் படத்தோடு ஊருக்குப் போய் விட்டார்.
இப்போதைக்கு நடிப்புக்கு டாட்டா, படிக்கப் போகிறேன் என்று கூறி வந்த பானு, மலையாளத்தில் மட்டும் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு 2வது படத்தில் புக் ஆகியுள்ளார் பானு. மூன்று என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் பானுதான் நாயகி. ஹரியின் உதவியாளரான சரவணன் இப்படத்தை இயக்கப் போகிறார்.
படத்தில் நாயனாக நடிக்கவிருப்பது லிங்குச்சாமியின் சொந்தக்காரரும், பிறப்பு படத்தில் நடித்தவருமான பிரபா. படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
மறுபடியும் வந்துட்டீங்களே, படிப்பு என்னாச்சு என்று பானுவிடம் கேட்டால், படிப்பு முடிந்து விட்டது. இதனால்தான் மீண்டும் நடிக்க வந்துள்ளேன். நல்ல கேரக்டர்களாகப் பார்த்துப் பார்த்து நடிக்கப் போகிறேன் என்கிறார்.