Don't Miss!
- News உலகை ஆட்டிப்படைக்கும் மஞ்சள் பிசாசு! தங்க விலை ஏறுவது ஏன்?
- Finance PF பணம் வித்டிரா செய்யும் முன் இதை தெரிஞ்சிக்கோங்க..!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மீண்டும் பாரதி வயசுப் பசங்க படத்தில் அறிமுகமான பாரதிக்கு அதற்குப் பின் நேரம் கூடி வரவில்லை. இதனால் தெலுங்கில் போய் குட்டிரோல்களில் தலைகாட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது தமிழ்ப் படங்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டன.யார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.முதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார். அப்படியே தன்னைத் தானே பல வகைகளிலும் கட்டாக படம் பிடித்து தயாரிப்பாளர்களுக்கு ரவுண்டு விட்டு வந்தார்.ஆல்பங்களை வாங்கி கண்ணில் ஒத்திக் கொண்டதோடு பாரதியை திருப்பி அனுப்பிவிட்டார்கள்.இந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் சேர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).இதனால் கோலிவுட்டில் மகிழ்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால், கேரளா, மும்பை பொண்ணுங்க தான் அழகோ.. ஏன் எங்க அழகுக்கு என்ன குறைச்சல். எங்க ஊருக்கு (கோயம்புத்தூருக்கு) வந்துபாருங்க.. எப்படி அழகான பொண்ணுங்க எல்லாம் இருக்கோம்னு தெரியும். ஆனா, கூச்சமும் நாணமும் அதிகம் உள்ளதால்தமிழ்ப் பெண்கள் அவ்வளவு சீக்கிரம் சினிமாவுக்கு வர்றதில்ல.எனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் அதிக கிளாமரான ரோல் தான். புதுப் பொண்ணா இருந்தாலும் நன்றாகவே துணிந்து நடித்தேன். இதையடுத்து யுகாபடத்துல நல்ல கேரக்டர் செய்றேன். ஆனால், பச்சக்குன்னு ரசிகர்கள் மனசுல புகுந்து ஒட்டிக்கிற மாதிரி ஒரு ரோல் கிடைக்கனும்னுஎதிர்பார்த்தேன். வாய்ப்பு தேடினேன்.அதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி.
யார் கண்ணன் இயக்கும் யுகா அமானுஷ்யப் படத்தில் பேய்களுடன் சேர்ந்து கவர்ச்சி காட்டி வரும் பாரதிக்கு இப்போதுபார்த்திபனுக்கு ஜோடியாக அம்மணி என்ற படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளது.
முதல் படத்தில் விந்தியாவை தனது கிளாமரால் வீழ்த்திக் காட்டியவர் பாரதி. அக்மார்க் தமிழ்ப் பெண்ணான (கோயம்புத்தூர் தான்பூர்வீகம்) இவரை கோலிவுட் ஏனோ கண்டு கொள்ளாமல் விட்டது. இதனால் சோகத்தில் புலம்பியபடி தயாரிப்பாளர்களின் வீடு,அலுவலகங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்.
இந் நிலையில் யார் கண்ணன் தான் தனது யுகா படத்தில் ஸ்வேதா, சுகாசினி (இவர் தெலுங்கு சுகாசினி), சந்தோஷி,சொர்ணமால்யா, ரிஷா ஆகியோரோடு பாரதியையும் சேர்த்துக் கொண்டு யுகாவைத் தொடங்கினார். நீண்ட காலமாக தயாரிப்பில்இழுக்கிறது யுகா. இந் நிலையில் அம்மணி படத்தில் இவரை பார்த்திபன் தனக்கு ஜோடியாக்கியிருக்கிறார். (பார்த்திபனுக்கு ஜோடிகிடைக்கிறதே ரொம்ப கஷ்டம்).
இதனால் கோலிவுட்டில் மகிழ்ச்சியுடன் உலா வர ஆரம்பித்திருக்கும் பாரதியிடம் சினிமா மேலே அப்படி என்ன மோகம் என்றுகேட்டால்,
எனக்கு சின்ன வயசுலேயே சினிமா தான் எல்லாம். சினிமாவுக்கு வர ரொம்ப கஷ்டப்பட்டேன். தேவயானியோட மேக்-அப் மேன்மூலமா முதலில் வயசுப் பசங்க படத்துல நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
அதற்குப் பலனா அம்மணி பட வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதுல நான் எப்படி நடிக்கிறேன்னு பாருங்க.. என்று சவால் விட்டுநிறுத்தினார் பாரதி.